பிரதமர் பொய் சொல்வதை ஏற்க முடியாது

பாகிஸ்தானிலிருந்து பைலட்டை மீட்டோம் இலங்கையிலிருந்து மீணவரை மீட்டோம் : மோடி

இப்படி எல்லாம் அரசியல் காரணங்களுக்காக பிரதமர் பொய் சொல்வதை ஏற்கமுடியாது

அபினந்தனை மீட்க இந்தியா பெரும் நடவடிக்கை எடுக்கவில்லை, ஏன் எந்த நிபந்தனைக்கும் கட்டுபடமாட்டோம் என்றே சொன்னது

உண்மையில் இறங்கி வந்தது பாகிஸ்தான் ராணுவம், அது அனுமதியின்றி அபினந்தன் வந்திருக்க முடியாது

கவனியுங்கள், என்னதான் ஐநா சட்டம் இருந்தாலும் சில பேச்சுவார்த்தை சில ஒப்பந்தம் தவிர எந்த நாடும் கைதியினை விடாது, ஆனால் பாகிஸ்தான் ஒன்றுமேயின்றி வெளியில் அனுப்பியது

இதில் மோடியின் சாதனை என எதுவுமில்லை, சாட்சியாக இம்ரான்கானே 3முறை அழைத்தும் மோடி பேசவில்லை என்கின்றார்

இலங்கை சிக்கல் வேறு, அதில் துப்பாக்கி சூடு குறைந்திருப்பது கவனிக்கதக்கது,அதை வேண்டுமானால் ஆதாரத்துடன் மோடி சொல்லலாம்

மற்றபடி அபினந்தன் விஷயத்தை அரசியலாக்குவது சரியல்ல