பிரதமர் மோடியை சந்தித்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்
“அட இரட்டை இலையினை எப்பவும் கொடுங்கங்க, இத படிங்க இதெல்லாம் நான் ரொம்ப விசுவாசமானவன்னு ஜெயலலிதா என்னை மும்முறை முதல்வராக்கிய கடிதமுங்க
என்னை முதல்வராக்கிட்டா, நா உங்களுக்கும் ரொம்ப விசுவாசமா இருப்பேனுங்க, அந்த பழனிச்சாமிக்கு விசுவாசம் கொஞ்சம் குறைவுங்க..
எசமான் உத்தரவு கொடுத்திட்டா நேரே அம்மா சமாதியில தியானத்த தொடங்கிரலாமுங்க..
ஏதோ பாத்து செய்ங்க, இது கூட முன்பு சசிகலாவிற்கு எழுதிகொடுத்த அடிமை சாசனமுங்க படிங்க
இத மாதிரி உங்களுக்கும் ஒண்ணு எழுதியிருக்கேன், வாசிக்கிறேன் கேளுங்க..”
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
மாதம் மும்முறை பிரதமரை சந்தித்து அப்படி என்னதான் பேசுவார் இந்த ஒபிஎஸ்?
அதுவும் ஒரு பிரதமர், தமிழக துணைமுதல்வரை மட்டும் அடிக்கடி சந்திக்கும் அவசியம் என்ன?
ஒருவேளை இந்த கருப்புபண ஒழிப்பு முதல், ஜிஎஸ்டி வரை இந்த பன்னீர்தான் மோடிக்கு ஆலோசனை கொடுத்துகொண்டிருக்கின்றாரோ?
இருபெரும் அறிவாளிகள் அடிக்கடி சந்திப்பது கவனிக்கவேண்டிய விஷயம்தான். இருவரும் ஆலோசனைகளை பகிர்ந்து நாட்டை வளபடுத்தட்டும்
(இருவரும் யார் போடும் டீ சிறந்தது என பெட் கட்டி டீ போட்டு விளையாடுவார்களோ? )