பிரபல கம்பெனியில் வேலைக்கு ஆள் எடுக்கின்றார்கள்
பிரபல கம்பெனியில் வேலைக்கு ஆள் எடுக்கின்றார்கள், கம்பெனியின் CEO , COO ஆகியோர் போர்டு ஆப் டைரக்டர்ஸ் மற்றும் சேர்மன் சார்பில் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்
நேர்காணலுக்கு செல்ல விரும்புகின்றவர்கள் செல்லலாம், விளம்பரம் மற்றும் மார்கெட்டிங் பிரிவுக்கு தற்போது ஆட்கள் தேவையாம்
தகுதி என்னவென்றால் நாட்டுபற்று இருக்க கூடாது, பகுத்தறிவில் இந்துமதத்தை மட்டும் திட்ட பிஎச்டி வாங்கியிருக்க வேண்டும் மற்றபடி தமிழோ இல்லை நாகரிகமாக பேசவோ தெரிந்திருக்கவே கூடாது அது கூடுதல் தகுதி
பிரிவினைவாத சிந்தனையிருந்தால் கூடுதல் புள்ளிகள் வழங்கபடும்
வேலைவாய்ப்பு மற்றும் சந்தை நிலவரத்தை கவனிப்பதால் உங்களுக்கு ஒரு ஆலோசனை சொல்கின்றோம், நிச்சயம் இது நல்ல கம்பெனி
சந்தையில் அதற்கு நல்ல வியாபாரம் இருக்கின்றது
பங்கு சந்தை வியாபாரத்தில் வல்லவர்கள். பங்கு வர்த்தகத்தில் அவர்களை அடிக்க ஆளே கிடையாது, அது ஒன்றினாலே பல்லாயிரம் மில்லியன் டாலர்களை குவித்தவர்கள்
இக்கம்பெனியில் 1 ரூபாய் முதலீடு அக்காலத்தில் செய்தவர்கள் இன்று மில்லியன் டாலர் தொழிலபதிபர்கள்
ஆனால் இப்பொழுது பொருளாதார நெருக்கடி நிலவுவதால் சம்பளம் இருக்காது, கம்பெனியின் வருமானம் பெருகும் பொழுது நல்ல கமிஷன் வழங்கபடும்
