பிரபாகரனின் தம்பி என்றால் சும்மாவா?

அந்த பிரபாகரனுக்கு அப்பொழுது 14 வயது இருக்கும், அப்பொழுதே அவர் போராளி. சிங்கள அரசினை எதிர்க்க ஒரு பஸ்ஸை எரிக்க வேண்டும் என அவரும் கூட்டாளிகளும் முடிவெடுத்தனர், ஆனால் பஸ் வந்ததும் ஓடிவிட்டனர்

ஆனால் அமைதியாக திட்டமிட்டபடி வெகு சிலரோடு பஸ்ஸை எரித்துவிட்டு திரும்பினார் பிரபாகரன், போலிஸ் விசாரித்து வீட்டுக்கே வந்தது

பின் வாசல் வழியாக தப்பி ஓடினார் பிரபாகரன், அதற்கு முன்பு என்ன செய்திருந்தார் என்றால் போலிஸ் தன் படத்தினை கைபற்ற கூடாது என முன்யோசனையில் தன் படங்களை எல்லாம் எரித்திருந்தார்

அதன் பின் அவர் சிக்கவே இல்லை, அவரின் படம் கூட சிங்களனிடம் இல்லை, பெரும் அழிவு அவர் கொடுத்தாலும் அவரை சிங்களனால் தொட முடியவில்லை

பஸ்தியான் பிள்ளை எனும் மிகபெரும் காவல்துறை அதிகாரி கொலைக்கு பின் சிங்கள போலீஸ் அவரை தேடுவதை அஞ்சி நிறுத்தியது, அதன் பின்பே ராணுவம் களத்திற்கு வந்தது

பிரபாகரன் பிடிபட்ட ஒரே இடம் சென்னை பாண்டிபஜார், மாணிக்கம் எனும் ஏட்டு அவரை பிடித்து விலங்கிட்டார், ஆனால் பிரபாகரன் இந்திராகாந்தியால் விடுவிக்கபடும் வரை அது பிரபாகரன் என அவருக்கே தெரியாது

அதன் பின் பிணமாகத்தான் பிரபாகரன் உடல் கிடைத்தது

இச்சம்பவம் இப்பொழுது ஏன் நினைவு கூற வேண்டும் என்றால் பிரபாகரனின் தம்பி அங்கிள் சைமனை காணவில்லை

பிரபாகரன் பாணியில் புகைபடத்தை எல்லாம் கிழ்த்துவிட்டு எங்கோ பதுங்கிவிட்டார் போல, இனி அவரை எப்படி யார் அடையாளம் காணமுடியும்?

எஸ்.வீ சேகரையே பிடிக்கமுடியாத தமிழக பொலீஸ், பிரபாகரனிடம் பயிற்சிபெற்ற வீரதமிழ் பிள்ளையினை எப்படி பிடிக்கமுடியும்? வாய்ப்பே இல்லை

இனி தமிழக காவலரோடு மாபெரும் யுத்தம் நடத்தி அவர்களை தோற்கடித்து, இந்திய ராணுவத்த்தை அங்கிள் தமிழகத்திற்கு வரவைப்பார் பாருங்கள்

பிரபாகரனின் தம்பி என்றால் சும்மாவா?