பிராமணயிச வாரிசாக மோடியும் அமித்ஷாவும் …

பிராமணயிச வாரிசாக மோடியும் அமித்ஷாவும் வந்துவிட்டார்களாம் சரி , அதனால் பெரியார் கொள்கையினை அவசரமாக தூசுதட்ட வேண்டுமாம்

நல்லது

பிராமணயிச வாரிசு வந்துகொண்டே இருக்குமென்றால், இங்கு பெரியார் கொள்கைகளுக்கும் சரியான வாரிசு வரவேண்டும் அல்லவா?

அப்பொழுதுதான் சமநிலை கிடைக்கும்

இங்கு பெரியாரின் உண்மையான வாரிசு அதாவது அவர் கொள்கைக்கான வாரிசு என யாரை சொல்வீர்கள்?

வீரமணியா? சசிகலவா?பன்னீர் செல்வம் பழனிச்சாமியா அல்லது முக ஸ்டாலினா, கமலஹாசனா?

சொல்ல முடியுமா? உலகம் சிரிக்காதா?

ஆக பெரியார் கொள்கைகளுக்கு மிக சரியான வாரிசு உருவாகமல் போனது யார் குற்றம்? உருவாகவிடாமல் பார்த்துகொண்டது யார்?

பிராமணன் பிராமணயிசத்தை தொலைநோக்கோடு பாதுகாத்து வருகின்றான் என்றால் பெரியார் கொள்கையினை இவர்கள் ஏன் 
பாதுகாக்கவில்லை?

பெரியார் கொள்கை என முழங்கிகொண்டிருப்பதால் ஒரு புல்லும் விளையாது, அவர் கொள்கைபடி நல்ல தலைவனை அல்லது தலைவியினை உருவாக்குங்கள்

இல்லாவிட்டால் இங்கு எந்த அரசியல் சமநிலையும் உருவாகா..

இதனை சொன்னால் நான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்காக பணம் வாங்கிகொண்டு எழுதுகின்றேனாம்.