பிராமணர்கள் படித்தவர்களாக இருக்கலாம்.. அறிவாளிகள் அல்ல : திருமா

பிராமணர்கள் படித்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அறிவாளிகள் அல்ல : திருமாவளவன்.

ஆமாம் உலகின் பல அறிவியல் கண்டுபிடிப்புகள், நிர்வாகவியல், கணக்கியல் எல்லாம் இவரும் இவர் கோஷ்டியும்தான் கண்டுபிடித்தார்கள்

உலகில் யூதனுக்கு பின் ஒரு அறிவார்ந்த இனம் என பிராமணனை உலகம் அறுதியிட்டு சொல்கின்றது. இதனால்தான் உலகெங்கும் அவர்கள் வரவேற்கபட்டு பெரும் கம்பெனிகளில் உச்ச பொறுப்பை அடைகின்றார்கள்

ஹூகுள் முதல் உலகின் பிரசித்தி பெற்ற விண்வெளி ஆய்வு , அணுசக்தி, ஆயுததொழில் வரை பிராமண மூளைகள் இருக்கின்றன‌

பொருளாதாரத்தை தீர்மானிக்கும் பல விஷயங்களில் அவர்கள் இருக்கின்றார்கள்

இந்திய மருத்துவம் முதல் பல தொழில்களில் முண்ணணியில் இருப்பது யார்?

வழகறிஞர்கள் உலகம் யார் கையில் இருக்கின்றது, சரி திருமாவும் வழக்கறிஞர் அல்லவா? அம்பேத்கர் சீடர் அல்லவா? அதை உடைத்து காட்டினால் என்ன?

சில உண்மைகளை தயக்கமின்றி ஒப்புகொள்ள வேண்டும்

திருமா தன் சட்ட அறிவால் பெரும் வழக்கறிஞர் ஆகட்டும் இந்தியாவின் முண்ணணி வழக்கறிஞராகி அவர் பிராமணரை பின்னுக்கு தள்ளட்டும்

இல்லை அவரின் சீட் கோடிகள் உலகெல்லாம் சென்று கூகுள் முதல் குண்டூசி கம்பெனி நிர்வாகம் வரை இடம்பெற்று சாதிகட்டும்

ராமன் விருது போல, ராமானுஜம் விருது போல‌ திருமா கோஷ்டி விருதுகளும் அறிவியில் உலகில் வழங்கபடட்டும்

அதன்பின் திருமா பேசலாம். அதுவரை உளராமல் இருப்பது நல்லது

நிச்சயம் பிராமணர் அறிவான இனம் அவர்கள் மூளையினை இந்நாட்டுக்கு எப்படி பயன்படுத்துவது என பாருங்கள்

குப்தன் முதல் ராஜராஜ சோழன் வரை அதைத்தான் செய்தார்கள், அநாட்கள் பொற்காலமாய் இருந்தன,

வெள்ளையனும் அதையே செய்துதான் நாட்டை நாடாக வைத்திருந்தான்

பிராமணார் என்று கூட அல்ல, அறிவும் திறமையும் எவனிடம் இருக்கின்றதோ அவனை நாட்டுக்காக பயன்படுத்தலாம் என்பது ராஜ நீதி

பிராமணர்களை பயன்படுத்தி நாட்டை வளர்க்க வெண்டுமே தவிர, அவர்களை காட்டி அரசியல் செய்தால் நாடு உருப்படாது

இத்தேசம் அப்படித்தான் உருப்படாமல் போய்கொண்டிருகின்றது

(அறிவாளி பிராமணர் வரிசையில் இந்த ராசா, சேகர் வகையறா எல்லாம் வராது

எல்லா இனத்திலும் சில கூமுட்டைகள் இருக்கத்தான் செய்யும்)