பிரிட்டனின் சம்மட்டி அடி
இந்த ஐ.நா, போர்குற்றம், முள்ளிவாய்க்கால், தமிழருக்கு நியாயம் என அலைந்த கோஷ்டிகள் தலையில் சம்மட்டியால் அடித்திருக்கின்றது பிரிட்டன்
போர்குற்ற விசாரணை அறிக்கையில் பல்டி அடித்து சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வைத்துவிட்டது
அதன் அறிவிப்பு தமிழருக்கு உதவியாக இல்லை மாறாக சிங்கள தரப்பை காப்பாற்றுவதாகவே அமைந்திருக்கின்றது
லண்டனில் இருந்துகொண்டு இந்தியா ஈழத்தை அழித்தது என ஒப்பாரிவைக்கும் கோஷ்டிகள் ஏதும், பாரிசில் , கனடாவில் இருந்து இப்பொழுது எதிர்த்ததாக தெரியவில்லை
எதிர்த்தால் மிதித்து இலங்கைக்கு விரட்டிவிடுவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும்
2009ல் புலிகளுக்கு தடை என சொல்லி அப்போருக்கு முழு உதவி செய்த பிரிட்டன் எப்படி இப்பொழுது உதவும்?
இந்தியா என்றால் எகிறுவதும், பிரிட்டன் என்றால் பம்முவதும் ஈழ அல்ட்ராசிட்டிகளுக்கு புதிதா என்ன?
வழக்கமாக இந்தியா துரோகம் என பொங்கும் வைகோ, சைமன், திருமுருகன் வாந்தி, இந்த வேல்முருகன் என யாராவது இப்பொழுது பிரிட்டன் துரோகம் பற்றி வாய்திறப்பார்களா?