பிரிட்டன் பாராளுமன்றத்திற்குள் எம்.பியாக நுழைந்தார் முதல் சீக்கிய பெண்மணி

பிரிட்டன் பாராளுமன்றத்திற்குள் எம்.பியாக நுழைந்தார் முதல் சீக்கிய பெண்மணி , கூடவே 12 இந்திய வம்சாவளியினர் எம்.பி.க் களாக தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பெரும் ஜனநாயக நாடு என்றும், உலகிற்கே மக்களாட்சியின் மகத்துவத்தை சொன்னதாக சொல்லும் பிரிட்டனில் இப்பொழுதுதான் இந்திய வம்சம் எம்.பி ஆகியிருக்கின்றதாம்
ஆனால் இந்திய வம்சாவளிக்கும், தமிழருக்கும் என்றோ பெரும் பொறுப்புக்களையும், அமைச்சர் பதவிகளையும் அள்ளி கொடுத்த நாடு மலேசியா, இன்னும் குறையாமல் கொடுத்துகொண்டிருக்கின்றது
அவ்வளவு அற்புதமான ஜனநாயக நாடு மலேசியா, இந்த லண்டன் சீக்கியர் வெற்றி பெரும் செய்தியாம், மலேசியாவில் சீக்கிய, தமிழ் என இந்திய வாரிசுகளை எல்லாம் என்றோ மலேசியா உயர்த்திவிட்டிருந்தது.
காமராஜர் மலேசிய இந்தியர்கள் நாடு திரும்பி இந்திய வளர்ச்சிக்கு உதவவேண்டும் என சொன்னதை மலேசியா அன்று ரசிக்கவில்லை
மாறாக “டேய் இந்தியா பக்கம் வராதீங்க. நல்ல வாழ்க்கை வேணும்ணா இந்தியா பக்கம் வரும் திட்டத்தை தூக்கி எறியுங்கள், உங்களை வாழ்வாங்கு வாழ வைக்கும் மலேசியாவிற்கு விசுவாசமாக இங்கே இருங்கள்
உலக நாட்டில் எந்த நாட்டில் உழைக்க வந்த தமிழனுக்கு அமைச்சர் போஸ்ட் கொடுப்பான், டிஜிபி போஸ்ட், ஜட்ஜ் போஸ்ட் கொடுப்பான், வெள்ளைக்கார ஐரோப்பிய நாட்டில் எல்லாம் கொடுக்கவே மாட்டான்..
அத இந்த அற்புத நாடு உங்களுக்கு கொடுத்திருக்கு, இங்க சந்தோஷாம கவுரவமா இருக்கிறதுதான் உங்களுக்கு நல்லது, இப்படி நாடு உலகில் கிடைக்காது”
என சொன்ன எம்.ஆர் ராதாவினை அந்நாடு அன்று தடுக்கவில்லை
அப்படிபட்ட அற்புத மலேசியா எப்படி வைகோவினை அனுமதிக்கும்? அனுமதிக்காது.
ஏன் அனுமதிக்காது என்பதை இதற்கு மேல் நீங்களே புரிந்துகொள்ளுங்கள்