பிரியாணி கடை தகறாறு
பிரியாணி கடை தகறாறு சாதாரண விஷயம் , இதற்கெல்லாம் முக ஸ்டாலின் சென்றிருப்பது நிச்சயம் சரியல்ல
இது அவருக்கு பிரியாணி கடையில் நற்பெயரை பெற்று தரலாமே தவிர, இதனால் கட்சி ரீதியாக அவர் பின்னாளில் நெருக்கடியினை சந்திக்கலாம்
திமுக என்பது கோடான கோடி தொண்டர்கள் நிரம்பியது, எல்லோரும் அண்ணாவழி என சொல்லமுடியாது, அடவாடி பார்ட்டிகள் ஏராளம்
இனி உட்கட்சி தகறாறிலே பிரியாணி கடையினை உடைத்து செயல் தலைவர் வரட்டும் என திமுகவினர் காத்திருப்பார்கள்
இந்த சிக்கலுக்கு ஸ்டாலின் சென்றுவிட்டதால், இனி திமுகவினர் பஞ்சு மிட்டாய்க்கு தகறாறு செய்தாலும் அவர் சென்றே தீரவேண்டும்
இதெல்லாம் அறிக்கைவிட்டுவிட்டு இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து மெழுகி முடிக்க்க வேண்டிய விஷயங்கள்
எல்லா விஷயங்களிலும் தலைவன் கீழே இறங்கி வரகூடாது என்பது அரச நீதி
“தம்பி திமுகவிற்கு உள்குத்து குத்த தெரியும், இப்படி மூஞ்சிலே குத்த தெரியாது
திமுக அடிக்கிற அடி எல்லாம் வெளி தெரியாம அடிக்கிறது, அப்பா காலம் வரை அப்படித்தான் இருந்தது.
இப்போ நானும் புதுசு, கட்சி உறுப்பினரும் புதுசுங்கிறதுனால இப்படி கொஞ்சம் குழப்பம்
மன்னிச்சிருங்க தம்பி, நம்ம ஆட்சி வந்த பின்னாடி அறிவாலயம் பிரியாணி சப்ளை பூரா உங்களுக்குத்தான்”
அந்த கட்சியில் ஜெயா இருந்தபொழுது இப்படிபட்ட பிரியாணி சங்கதிகள், வில்லங்க செய்திகள் என்றால் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கபடுவர்
அடாவடி பார்ட்டி முடிந்த அளவு போயஸ்கார்டனுக்கு வந்து மன்னிப்பு கேட்க பார்க்கும், அம்மா கொஞ்சமும் அசையாது
யாராக இருந்தாலும் கட்சியிலிருந்து விரட்டிவிட்டு எவன் இல்லை என்றாலும் கட்சி நடத்தும் ஆற்றல் தனக்கு உண்டு என சொல்லிகொண்டிருந்தவர் ஜெயா
அவரின் தன்னம்பிக்கை அப்படி, வசூல் சிக்கல்களில் ஏதும் புகார் என்றால் சின்னம்மா கவனித்து ஒரு பைசா பாக்கி இல்லாமல் வசூலித்துவிடும் என்பதெல்லாம் இன்னொரு சாகச பிரிவு
மற்றபடி இம்மாதிரி சில்லறை பிரச்சினைக்கெல்லாம் இருந்த இடத்தில் இருந்து கட்சியினை விட்டு விரட்டுவார்கள்
விரட்டமுடியாத பட்சத்தில் அது எந்த கொம்பனாக இருந்தாலும் என்கவுண்டர் வரை செல்ல அவர் தயங்கியதில்லை
இங்கோ ஒரு கட்சி தலைவர் அந்த குத்துசண்டை காரனை அறிவாலயம் அழைத்து செவிட்டில் போடுவதை விட்டு இந்த கடை பிரியாணிக்கா தகறாறு என விசாரித்துகொண்டிருக்கின்றார்
ஆயிரம் சொல்லுங்கள் , தமிழக யதார்த்தபடி கட்சி நடத்த தெரிந்தவர் ஜெயா, அதனால்தான் அவரால் சாகும்வரை முதல்வராகவே நீடிக்க முடிந்தது