பிரியா வாரியார் என்றொருவர் வந்திருக்கின்றார்
நொடிக்கொரு கனவுகன்னிகள் வந்து போகும் காலமிது, அப்படி பிரியா வாரியார் என்றொருவர் வந்திருக்கின்றார்
அம்மணி என்ன செய்கின்றது என்றால் ஒரு பாடல்காட்சியில் புருவத்தை ஒரு மாதிரி சுழிக்கின்றது, இது சிக்கலான கேள்வி கேட்டால் நமது அரசியல்வாதிகள் சுழிப்பது போலத்தான் இருக்கின்றது
ஆனால் அதுவும் அழகு என ஒரு கூட்டம் திரிகின்றது, விரைவில் குடும்ப வாழ்வில் நுழைய இருக்கும் இந்த Babu Rao என்பவர் நயன் தாராவினை எப்படி தலைமுழுக என நினைத்தபொழுது இந்த வாரியார் சிக்கிவிட்டார்
போதாதா? நயனை தூக்கி எறிந்துவிட்டு பிரியா வாரியார் ரசிகனாகிவிட்டார் அந்த படுபாவி Babu Rao
ஓரிரு முறை பார்த்தால் அம்மணி புருவத்தை நெளித்து கண்ணை மூடி திறக்கும் பொழுது ஒரு கவித்துவம் தெரிகின்றது, அழகுதான் , விரைவில் தமிழ்படங்களில் வரலாம்
ஆனால் நம் மனதை முழுக்க ஆட்கொண்டுவிட்ட குஷ்புவின் இடத்தை இம்முகத்தால் நெருங்க முடியுமா? நிச்சயம் முடியாது.
சங்கம் என்பது தலைவி வாழும் கோவில், , தெய்வம் அங்குதான் குடியிருக்கும்
இது போன்ற ஆயிரம் புயல்களை கடந்துதான் சங்கம் நிலைத்து நிற்கின்றது, ஆனால் அந்த என்பவர் இதோ ஒரு சிறிய தென்றலுக்கே சரிந்துவிட்டார் Babu Rao
பாவம் நயன் தாரா, நல்ல காதலர்கள்தான் அவருக்கு இல்லை என்றால், உண்மையான ரசிகர்கள் கூட இல்லை , அவர் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்,
அவ்விஷயத்தில் எங்கள் தலைவி மிகுந்த அதிர்ஷ்டசாலி