புட்டீன் உலகினை இன்னும் பயமுறுத்துவாரோ?

தன் நாட்டில் புகுந்து ரஷ்யா உளவாளிகள் மீது நச்சு வாயு தாக்குதல் நடத்தியதில் பிரிட்டன் கடும் கோபத்தில் இருக்கின்றது

பின்ன?, இலங்கையில் இருந்து, பாகிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் யாரை கொன்றாலும் பார்த்துகொண்டிருக்க அது இந்தியாவா?

ரஷ்யா இதற்கு விளக்கம் அளிக்கவேண்டும் இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரித்திருக்கின்றது.

ரஷ்யாவோ கொஞ்சமும் அலட்டவில்லை, சட்டையில் விழுந்த தூசியினை தட்டியது போல தட்டிவிட்டு அமைதி காக்கின்றது

பிரிட்டன் கோபகணல் வீசிய உடன் ரஷ்யா நவீன ஏவுகனை எல்லாம் சோதித்தது என்றால் யுத்தத்திற்கு தயார் என்பதே பொருள்

இதனால் தெரசா மே சொன்னதை எல்லாம் காதுகொடுத்து கேட்க ரஷ்யா தயாராக இல்லை

உக்ரைன் சிக்கல், பால்டிக் நாடுகளில் ஏவுகனைதடுப்பு என்றபெயரில் அமெரிக்க கால்பதிப்பு எல்லாம் ரஷ்யாவினை மிக கடுமையாக சீண்டின, இதனால் எதற்கும் தயார் என துணிந்துவிட்டது ரஷ்யா

இரு தேசங்களுக்கும் இடையில் பெரும் பதற்றம் நிலவுகின்றது

இதில் ஜூன்மாதம் ரஷ்யாவில் தொடங்க இருக்கும் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு எந்த பாதிப்பும் வரகூடாதே என கால்பந்து உலகம் அச்சத்தில் இருக்கின்றது

இந்த புட்டீன் எத்தனை உலகினை இன்னும் பயமுறுத்துவாரோ?