புட்டீன் கடிதம்
நவீன துப்பாக்கிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க முடிவெடுத்திருந்தது இந்தியா, பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தினார்கள்
ஆனால் புல்வாமா இன்னபிற சம்பவங்களால் நிலமை மாறிவிட்டது
இந்த நேரத்தில் ரஷ்யா காத்த மவுனம் இந்திய தரப்பு எதிர்பாராதது, புட்டீன் அப்படி கனத்த மவுனமாக இருந்தார்
இன்று வாய்திறந்திருக்கின்றார், அதுவும் கடிதமே அனுப்பியிருகின்றார்
அதன்படி ஏ.கே 203 ரக துப்பாக்கிகள் ரஷ்ய பங்களிப்புடன் இங்கே தயாரிக்கபடும் , அதனால் இந்திய பாதுகாப்பு வலுப்படும் என சொல்லியிருக்கின்றார்
ஆக அமெரிக்காவுக்கான இந்திய டீல் இப்பொழுது என்னாகும் என சொல்ல தெரியவில்லை
ஆனால் இனி பாகிஸ்தான் தாக்கினால் புட்டீனின் சத்தம் வரும் என்பது மட்டும் உறுதியாக சொல்லமுடியும்
தமிழகத்தில் தொகுதி பங்கீடு நடப்பது போல இது ஒருமாதிரியான ஆயுத பங்கீடு
துப்பாக்கி தயாரிக்கலாம், ஒருவேளை இயக்குவதில் சிக்கல் என்றால் இந்தியா என்ன செய்யும்?
அதற்கென்ன அங்கிள் சைமன் புலிகளிடம் பிடிக்காத துப்பாக்கியா? சுடாத குறியா?
ஏகே 203 என்ன? 2003 கொடுத்தாலும் அங்கிள் மிக எளிதாக பாவித்து அசத்திவிட மாட்டாரா?