புதிய கல்வி கொள்கை ஒப்பாரி
காமராஜர் ஆட்சி நன்றாக இருந்தது, ஆனால் அது சரியில்லை என திமுகவும் திராவிட கோஷ்டிகளும் ஒப்பாரி வைத்தன, பெரும் அழிச்சாட்டியம்
இன்றும் காமராஜர் ஆட்சி நல்லாட்சியாகவே கருதபடுகின்றது
இந்தியினை எதிர்த்து அழிச்சாட்டியம் செய்தது திமுக, இன்று இந்தியின் அவசியம் புரிந்து தமிழர்கள் ஓடி ஓடி படித்துகொண்டிருக்கின்றனர்
இந்திராவினை எதிர்த்து ஏன் தாக்கிய கட்சி திமுக, இன்றளவும் இந்தியாவின் மிகசிறந்த பிரதமர்களில் ஒருவர் இந்திரா என உலகம் சொல்கின்றது
விடுதலை புலிகள் கையில் எடுக்க கூடா அடங்காபிடாரிகள் என்றது இந்தியா, மீறி அவர்களை அணைத்தது திமுக
அமைதிபடையினை எதிர்த்ததும், அதை திரும்ப பெற்றதும் திமுக
விளைவு ராஜிவ் படுகொலையில் போய் முடிந்து, 2009ல் திமுகவும் தீரா பழி சுமந்தது
ஆக எதை எல்லாம் இவர்கள் ஆதரிப்பார்களோ அதெல்லாம் ஆபத்தான விஷயமாக இருந்திருக்கின்றது, எம்ஜி ராமசந்திரன் பிரபாகரன் உட்பட.
வரலாறெங்கும் திரும்பி பார்த்தால் இந்த திமுக திராவிட இம்சைகள் எதை எல்லாம் எதிர்க்குமோ அதெல்லாம் நல்ல விஷயமாகவே இருந்திருகின்றது
அப்படி இந்த புதிய கல்வி கொள்கை என ஒப்பாரியினை அவர்கள் தொடங்கும் நேரம், ஒருவேளை அதுவும் நல்ல திட்டமாக இருக்கலாமோ என அவர்களின் கடந்தகால வரலாறு நினைவுபடுத்துகின்றது