புதிய ₹ 2000 நோட்டு
இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கதை என்னவென்று தெரியவில்லை, அதில் காந்தி இருக்கின்றாரா இல்லையா எனும் சர்ச்சை ஒருபுறம். இருப்பார் என நம்புவோம்.
அதனை விட முக்கியம் இந்திய சின்னமான 4 சிங்க அசோக முத்திரை இருக்கின்றதா? இல்லை அதிலும் ராமரின் வில்லும், கிருஷ்ணனின் சக்கராயுதமோ புல்லாங்குழலா இருக்கின்றதா என்பது.
சொல்லமுடியாது, அண்டார்ட்டிக்கா பென்குயின்களிடம் பேசமுடியாது என்பதால் மற்ற எல்லா நாடுகளுக்கும் சென்று பாரதபெருமை பேசியிருப்பவர் பிரதமர் மோடி, இனி எங்கள் பணத்தில் இப்படி அடையாளம் இருக்கும், ஏற்றுகொள்வீர் என சொல்லியிருக்கலாம்
இது எப்படியும் போகட்டும், ஆனால் கரன்சி மதிப்பில் அதிகரித்து நோட்டுகள் வருவது இந்திய பொருளாதாத்திற்கு நல்லது அல்ல
முன்னேறிய எல்லா நாடுகளிலும் விலைவாசி குறைவு, அதாவது அவர்கள் பணமதிப்பு அதிகம், அதனால் பெரும்பாலும் 100 நம்பர் நோட்டினை தாண்டாது
பெரும் பணம் என்றால் சில பத்திரங்களில்தான் மாறும்.
நாம் 2000 சென்றிருக்கினோம் என்றால் அது நமது வீழ்ச்சியினை காட்டுகின்றது, இனி 100000 வரும் இது இன்னும் பெரும் வீழ்ச்சியினை காட்டும்
இந்தோனேசியாவில் பல ஆயிரம் வரை உண்டு, சமீபத்திய ஜிம்பாப்வே 1 லட்சத்திற்கு சென்றாயிற்று அவை எல்லாம் அந்நாடுகளின் பொருளாதார சீரழிவினை காட்டுகின்றது
இந்தியாவின் இந்த ரூ.2000 நிலை நிச்சயமாக நமது பொருளாதார வீழ்ச்சியினை விலைவாசி உயர்வினையே காட்டுகின்றது
சும்மாவே இந்திய பணத்தினை உலக சந்தையில் குப்பையாக பார்ப்பார்கள், இனி நிலை இன்னும் மோசம்
ஏதும் சொன்னால் நம்மை தேசதுரோகி என்பார்கள்
நோட்டு வந்துவிட்டதா இல்லையா என்பது தெரியாது, வதந்தியாக இருந்தால் நல்லது.
ஆனால் ரிசர்வ் வங்கி அடித்து வெளிவந்துவிட்டால் அதன் பொருள் என்ன?
இந்நாட்டின் விலைவாசியும் பொருளாதாரமும் வீழ்ந்துகொண்டிருக்கின்றது என்பதற்கு அரசே ஒப்புகொண்ட பத்திரமே இந்த 2000 ரூபாய் நோட்டு என்றாகிவிடும்.
மிகுந்த கவலைக்குரிய ஒன்று இந்த விஷயம்.
அது மோடியின் மேஜிக் அல்ல, மாறாக பிளாக் மேஜிக் என்றே அழைக்கபடும்