புதுச்சேரியில் நடந்திருக்கும் சுவாரஸ்ய சம்பவம்
புதுச்சேரியில் நடந்திருக்கும் சம்பவம் சுவாரஸ்யமானது
அதாகபட்டது அங்கு கவர்னர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் ஏகபட்ட மோதல்
கிரண்பேடிக்கு எப்பொழுதுமே அரசியல்வாதிகள் வருவார்கள் போவார்கள், அதிகாரி நிரந்தரமானவர் என்ற மனோபாவம் உண்டு. ஆனானபட்ட இந்திராவுடனே மல்லுகட்டியவர் அவர்
புதுவை முதல்வர் நாராயணசாமி என்றால் தெரியாது, ஆனால் 15 நாள் நாராயணசாமி என்றால் எல்லோருக்கும் புரியும். சகல பிரச்சினைக்கும் 15 நாளில் முடிவு சொன்னவர், எத்தனை 15 நாள் ஆனாலும் கிரண்பேடியினை அசைக்க முடியவில்லை
இதனால் கிரண்பேடி படத்தை முறைத்துகொண்டே பிண்ணியில் “அடிடா அவள, கொல்றா அவளை, வெட்ரா அவள, தேவையே இல்ல” என பாடிகொண்டிருப்பவர்
கிரண்பேடியோ கொஞ்சமும் அசராதவர், ஜெயலலிதா அதிமுக அமைச்சர்களை வைத்தது போல் வைத்திருக்கின்றார்
இருவரையும் ஒரே மேடையில் வைத்தால் எப்படி இருக்கும், அப்படி ஒரே மேடையில் அமர்தனர்
கிரண்பேடிக்கு தமிழ் தெரியாது, இதனால் அவர் ஆங்கிலத்தில் பேசுவதை தமிழில் மொழிபெயர்க்க ஆள் தேடினார்கள்
சட்டென மைக்கை பறித்து மொழிபெயர்க்க தொடங்கினார் நாராயணசாமி, ஏகபட்ட கரகோஷம். கிரண்பேடியும் மகிழ்வுடன் பேச தொடங்கினார்
கூட்டம் ஒரே மகிழ்ச்சி ஆராவாரம், கிரண்பேடிக்கு தன் பேச்சுக்குத்தான் வரவேற்பு என ஏகபட்ட மகிழ்ச்சி
உண்மையில் என்ன நடந்திருக்கலாம்
இதுதான் வாய்ப்பு, நாம் என்ன பேசினாலும் கிரண்பேடிக்கு புரியவா போகின்றது? என நாராயண்சாமி சொந்த பேச்சினை பேசியிருக்கலாம்
கிரண்பேடி பேச இவரோ மொழிபெயர்ப்பில் “நாராயண்சாமி நல்லவரு, உத்தமரு, இரண்டாம் காந்தி, அடுத்த அரவிந்தர். ஏதோ மோடி கும்பலால் நான் அந்த மனிதனை பாடாய் படுத்துகின்றேன்
விரைவில் ராஜினாமா செய்வேன், நாராயணசாமியிடம் மன்னிப்பு கேட்பேன், அவரை நீங்கள் நிரந்தர முதல்வராக அமர்த்த வேண்டும்” என அள்ளி விட்டிருக்கலாம்
கூட்டம் கைதட்டியதை பார்த்தால் அப்படித்தான் இருக்கின்றது
( முதலில் மிக மகிழ்வாக பேசிய கிரண்பேடிக்கு நிச்சயம் கூட்டத்தின் சத்தம் கண்டதும் சந்தேகம் வந்திருக்கலாம்
இப்பொழுது அவருக்கு யாராவது நாராயணசாமி தமிழில் பேசியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துகொண்டிருப்பார்கள்
போலிஸ் மூளை அல்லவா? இருமுறை சரிபார்த்து கொள்ளாமல் ஓயாது, அதுவும் நாராயணசாமி பேசியபின் சந்தேகம் வராமல் இருக்குமா? )