புதுவெளிச்சத்துடன் எழும்பி வருவதை உலகமும் ஆச்சரியத்துடன் கவனிக்கின்றது

ஒரு இனத்தை தொடர்ந்து அடிமையாக வைத்திருக்க எல்லா ஆளும் இனமும் செய்யும் நுட்பம் அந்த இனத்தின் அடையாளத்தை ஒழிப்பது

அலெக்ஸாண்டர் காலத்தில் அது உண்டு

மிகசிறந்த உதாரணம் ரோமர்கள் அழித்து போட்ட யூதர்களின் ஆலயம்

அன்றைய இஸ்ரேல் யூதேயா என தனிநாடாக இருந்தது, ஆனால் ரோமருக்கு அடங்கிய நாடாக இருந்தது, ஏரோது அதன் அரசனாய் இருந்தான் அப்பொழுதுதான் இயேசு பிறந்தார்

யூதர் அவ்வப்போது கலகம் செய்வதும் ரோமர் அடக்குவதுமாய் காலம் நகர்ந்தது, இயேசுவினை கூட சுதந்திர போராளியாக மக்கள் கருதிய காலம் இருந்தது அவரோ சீசருக்கு வரிகட்டுங்கள் என இயல்பாய் சொன்னதில் பல யூதரின் முகம் கருகிற்று

இயேசுவுக்கு பதிலாக விடுவிக்கபட்ட பரபாசும் ஒரு விடுதலை போராளியே

இயேசுவுக்கு பின் யூத அட்டகாசம் கூடி போக ரோமர் ஜெருசலேமில் இருந்த ஆலயத்தை இடித்து தகர்த்தனர், இன்றுவரை அது கட்டபடவில்லை

ஆலயம் இல்லா யூதருக்கு ஜெருசலேமில் என்ன இருந்தது? உலகெல்லாம் சிதறடிக்கபட்டார்கள்

ஆம் யூதனின் அடையாளத்தை ஒழித்தால் அந்த இனம் அடிமாடாகிவிடும் என கணக்கிட்டனர் ரோமர்

ஆனால் யூதத்தின் தொடர்ச்சியான கிறிஸ்தவம் ரோம மதத்தையே அழித்தொழித்தது காலத்தின் கோலம்

அது கவனித்தால் புரியும், ரோமை கிறிஸ்தவம் கைபற்றவும் ரோமை மதமே ஒழிந்தது, ரோம் மதமும் இனமும் இல்லை

ஏதென்ஸை விழுங்கியதும் கிரேக்கமதம் பூண்டற்று போயிற்று

இந்தியாவினையும் இப்படி ஆக்கிவிடத்தான் துடியாய் துடித்தார்கள், ஆதியில் புத்தமதமும் சமண மதமும் அதை செய்தது

இந்துமதம் ஒழிக்கபட்டு சமணமும் பவுத்தமும் கோலோச்சின, ஆனால் அணைந்த பெரு நெருப்பின் சிறு கணலாக எஞ்சிய ஆதி சங்கரர் அதை மீட்டெடுத்தார்

பின் ஆப்கானிய மன்னர்கள் அதை செய்தனர், பல கோவிலகள் உடைக்கபட்டு மசூதியாயின, அவர்களுக்கு நாயக்க மன்னரும் மராட்டியரும் சவால்விடுக்கும் பொழுது பிரிட்டானியன் வந்து சேர்ந்தான்
(அந்த ஆப்கானியரின் தொடர்ச்சிதான் பாமியான் புத்த சிலைகள் ஆப்கானிலே நொறுக்கபட்டது, நம் கண்முன் கண்ட சாட்சி அது)

ஆப்கானியர் வாள்முனையில் செய்ததை தன் நயவஞ்சகத்தால் செய்தான் வெள்ளையன்

அப்பொழுது உருவான குரல்தான் தமிழனுக்கு மதமில்லை, இந்து ஆலயங்களை உடைத்து ரோடு போடுவோம், ஆலய சிலைகளில் அம்மி அரைப்போம் என்பது

அந்த ஏவல் குரலும் மங்கி கொண்டிருக்கின்றது என்பது காலத்தின் கட்டளை

பண்டைய உலக மதமெல்லாம் கிறிஸ்தவத்தாலும் இஸ்லாமாலும் அடையாளமின்றி துடைத்தொழிக்கபட, இந்துமதம் ஒன்றே அதன் போக்கில் இயங்கி வருகின்றது

அது இங்கு புதுவெளிச்சத்துடன் எழும்பி வருவதை உலகமும் ஆச்சரியத்துடன் கவனிக்கின்றது