புத்தம் சரணம் கச்சாமி

Image may contain: 1 person, text

ஒரு காலத்தில் மொத்த இந்தியாவயும், கிழக்காசியா, ஆப்கன் எல்லாம் புத்தமதம் ஆண்டிருக்கின்றது என்றால் நம்பித்தான் ஆகவேண்டும்,

அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கின்றது.

இன்று இலங்கைக்கு இந்தியா உதவி செய்கிறது என முழக்கமிடும் நாம், அன்றே இலங்கைக்கு இந்தியா அனுப்பிய புத்தமதமே சகலகொடுமைகளுக்கும் மூலம் என்பதை மறந்துவிட்டோம், இந்தியா அன்றே கொடுத்து கெடுத்திருக்கிறது.

ஆனால் புத்தரின் கொள்கைகள் உயர்வானவை, நேர்மையான கட்சியும், நல்ல தலைவர்களும் இந்திய தேர்தலில் காணமல் போவது போல. நல்ல கொள்கைகள் கொண்ட அம்மதமும் இந்தியாவில் துடைக்க்கபட்டது.

ஜப்பானியர்களும்,சீனர்களும்,மற்றும் கிழக்காசிய புத்த மக்களுக்கு வாழ்வில் மதத்திற்கு இடமில்லை, நாலுவாய் அள்ளிபோட்டு வேலைக்கு செல்லும் வாழ்க்கை, கிறிஸ்தவ,இஸ்லாமிய,இந்து மதங்களை போல எந்த கட்டுப்பாடுமில்லை. செய்யும் தொழிலே தெய்வம்,

பண்டிகை காலம் வந்தால் கடவுள் நினைவுக்கு வருவார், முடிந்தால் புத்தர் கோயிலுக்கு செல்லுவார்கள் அவ்வளவே.

அன்பையும் சமாதானத்தையும் போதித்த அம்மதம் இரு வளமான தேசங்களான பர்மாவையும்,இலங்கையையும் வன்முறை பூமியாக மாற்றி ஓட்டாண்டி தேசமாக மாற்றிவிட்டதே சோகம்.

இன்றைய கிழக்காசிய கூட்டணி மிக விசித்திரமானது, புத்த மதத்தினை தாங்கள் மட்டுமே காப்பாற்றமுடியும் என்று நம்பும் இலங்கை, பர்மாவின் அதிகார பீடங்கள், புத்த மதத்தை கருவருத்தே தீருவோம் என சொல்லி திபெத்தை விழுங்கி அடுத்து புத்த மத மாநிலமான அருணாசலபிரதேசத்தை அழிக்க நினைக்கும் சீனாவுடன் கூட்டணியில் இருப்பதுதான் மிக வினோதம்,

இதையெல்லாம் சிங்கள ராவண சேனா, பொதுபல சேனா அமைப்பினரிடம் யாரும் சொல்லுவதில்லை

ஆசியாவின் கிழக்கு நாடுகளுக்கு புத்த மதத்தினை கொடுத்தது இந்தியா, அம்மதத்தின் நாடுகள் மூலம், அம்மதத்திற்காக‌ பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்வதும் இந்தியா, அந்தோ பரிதாபம், நன்றாக வாங்கி கட்டுகிறது.

புத்தரின் தூய்மையான போதனைகளை பின்பற்றினால், தேற்காசியா மற்றும் கிழக்காசியாவில் நிரந்தர அமைதி நிலவும் என்பது நிதர்சனமான உண்மை, ஆனால் அது சாத்தியமே இல்லை.

மனிதவரலாற்றில் முதன்முதலில் நிஜமாக ஒரு “புரட்சி” செய்தவர் என்றால் அது புத்தர்தான், வரலாற்றில் முதன் முதலில் துண்டுபோட்டு இடம்பிடித்து இன்னமும் சிம்மாசன‌ம் போட்டு அமர்ந்திருப்பவர், அவரின் பிறந்தநாளும் வரலாற்றின் முக்கிய நாளே.

உயிர்பலி இன்னும் பெரும் மூடபழக்க வழக்கங்களில் இருந்த இந்தியாவில், வாழ்க்கையினை சடங்குகளில் அல்ல மானிட நேயத்தில் கழிக்க சொல்ல போதித்தவர்

அவர் வாழ்வில் பெரும் அதிசயம் செய்யவில்லை, தன்னை கடவுள் என சொல்லவில்லை ஆனால் மனிதன் மனிதனாக வாழ வாழ்க்கை தத்துவத்தை போதித்தார்

அதுவரை உயிர்பலி கொண்டிருந்த இந்துமதம் புத்தனின் எழுச்சிக்கு பின்னே உயிர்பலி இல்லா சடங்குகளுக்கு தன்னை மாற்றியது. அதுவரை மிருகங்களை வெட்டி தீயில் போட்டு நிகழ்த்தபட்ட யாகங்கள் புத்தனுக்கு பின் நெய் பெய்து யாகம் வளர்க்க திரும்பியது

சாதிகொடுமையினை அன்றே ஒழித்தது புத்தமதம்

புத்தனின் பொன்மொழிகளும் தத்துவமும் மாபெரும் அரசர்களையே மண்டியிட செய்தது. ஆசியாவின் பெரும்பான்மையான மன்னர்கள் தயக்கமின்றி புத்தமதம் ஏற்றனர்

பெரும் நிலபரப்பினை ஒருகாலத்தில் அது ஆண்டிருக்கின்றது, இந்தியா முழுக்க அது பின்பற்றபட்டிருக்கின்றது

தமிழக இலக்கியங்கள் அதனை அப்படியே படம்பிடித்திருக்கின்றன, பல இலக்கியங்களை புத்தமதம் கொடுத்திருக்கின்றது

இன்று புத்த பூர்னிமா, மானிட வரலாற்றின் முதல் புரட்சியாளனும், சீர்திருத்தவாதியுமான அவருக்கு அஞ்சலிகள்

ஒரு காலத்தில் தமிழகத்தின் மூலைகளிலெல்லாம் ஓயாது ஒலித்த வாக்கியம்

“புத்தம் சரணம் கச்சாமி”,

காலம் எல்லாவற்றையும் பதிவு செய்தபடி எப்படியெல்லாமோ மாறிகொண்டே இருக்கின்றது