புத்தரே ஞானம் பெற என்ன செய்யவேண்டும்?

புத்தரே ஞானம் பெற என்ன செய்யவேண்டும்?

ம்ம்ம்.. இந்த இட ஒதுக்கீடு, புரட்சி, புண்ணாக்கு என எதுவும் பேசாமல் காட்டுக்கு சென்று அரசமரத்தின் கீழ் அமர வேண்டும், சினிமா அது இது என கோடிகளை தேடாமல் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்க வேண்டும்

பின் எப்படி புரட்சி வெடிக்க்கும்?

அன்பனே, அரசே வேண்டாம் என சென்றவன் நான், நீயோ அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு, ஆட்சியில் பங்கு என அரசியல் குழப்பம் விளைவிப்பதிலே குறியாய் இருக்கின்றாய், உனக்கு ஒரு காலமும் ஞானம் கிட்டாது, ஞானம் தேடிய என்னை வைத்து கொண்டு ரஜினி கமல் அமீர்கான் படம் தேடி கொண்டிருக்கின்றாய், உன்னை நினைத்து எனக்கு பரிதாபமாய் இருக்கின்றது

அப்படியானால் நீர் விரும்பிய‌ சமத்துவ அரசாங்கம் அமையவேண்டும் என விரும்புவது தவறா?

நான் எங்கே அப்பனே விரும்பினேன்? அரசே வேண்டாம் என சொன்ன என்னை வைத்து ஆளாளுக்கு அரசியல் செய்தார்கள், நாசமாய் போனார்கள்

அப்படியானால் இங்கிருந்து பார்பன இந்துக்கள் உங்களை விரட்டவில்லையா?

அந்த பரிதாப ஜீவன்கள் யாரையப்பா விரட்டுவார்கள், இன்றைய இலங்கையினை பார் என்னை ஏன் இந்தியாவில் இருந்து விரட்டினார்கள் என அப்பொழுது புரியுமப்பா…