புனிதம் கெட்டுவிட்டதாம்
ரஜினிகாந்துக்கும் திருமணத்துக்கு முன்பு காதல் இருந்தது, அவர் சிக்கிய சர்ச்சைகள் ஏராளம்
ஆனால் அவர் அத்திவரதரை தரிசிக்க சென்றால் சிக்கல் இல்லை
நயன் சென்றுவிட்டால் அதன் புனிதம் கெட்டுவிட்டதாம்
நயன்மேல் எவ்வளவு சர்ச்சை இருந்தாலும் அது அவரின் தனிபட்ட வாழ்வு, நிச்சயம் எந்த பெண்ணும் உண்மையான அன்பினை தாண்டி செல்வதில்லை, அது கிடைக்கா பட்சத்திலே வெளியேறுகின்றாள்
நயனின் நடிப்பினை விமர்சிக்கலாம், ஆனால் அவர் ஆலயத்திற்கு சென்றதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இருப்பதாக தெரியவில்லை
சினிமாவில் அவளுக்கு கைதட்டுவோம் என்பதும் ஆனால் ஆலயத்துக்குள் வரகூடாது என்பதும் எவ்வகை நியாயமோ?
அவளுக்கும் மனமுண்டு, அவளுக்கும் தனிபட்ட விருப்பு வெறுப்பு உண்டு. ஆலயத்தின் பீடத்துக்கு பூரானும் கரப்பான் பூச்சியும், இன்னும் ஈயும் வண்டும் வரலாம்
நயன் வந்தால் புனிதம் கெடுமாம்
அன்றொருநாள் பெண்ணின் மேல் கல் எறியும் கும்பலை பார்த்து “உங்களில் பாவம் இல்லாதவன் அவள்மேல் முதல் கல்லை எறியுங்கள்..” என்றார் இயேசுநாதர்