புரோகித்தை எளிதில் விடுமா?
அவர் போக்கில் இருந்த அன்றைய கவர்னர் சென்னா ரெட்டியினை பெண் முதல்வரே அலற வைத்த தமிழகம் இது
புரோகித்தை எளிதில் விடுமா?
இதில் இவர் கன்னத்தை வேறு தட்டி தொலைக்கின்றார்.
போனது ஒரு புகாருக்கு விளக்கம் கொடுக்க, அங்கு சென்று இன்னொரு புகாரினை இழுத்து வந்திருக்கின்றார்
ஆக அந்த மோடி கூட்டத்தில் எல்லாம் ஒரு மாதிரி போல..
கவர்னர் கூட்டம் போட்டு விளக்கம் அளித்த விஷயம் சொல்ல வரும் செய்தி இதுதான்
கவர்னருக்கும் முதல்வருக்கும் பல இடங்களில் முட்டுகின்றது, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உறவு சுமூகமில்லை
போராட்ட களங்களில் அந்நிய சக்திகள் புகுந்துள்ளன என்ற பொன்னாரின் வார்த்தையும் சாதாரணம் அல்ல
மாநில அரசை கலைக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இருக்கலாம், இதனை தெரிந்துகொண்ட மாநில அரசு என்னது? கவர்னர் ஆட்சியா? இவரின் ஆட்சியா? என்ற அளவில் இறங்கியிருக்கலாம்.
காரணங்கள் இல்லாமல் இங்கு எந்த சலசலப்பும் ஏற்படுவதில்லை
சில விவகாரங்களை கவனித்தால் விரைவில் பழனிச்சாமி அரசுக்கு மங்களம் பாடபோகின்றார்கள் என்பது புரிகின்றது
அந்த நன்னாள் விரைவில் மலரும்..