புலிகளின் இந்த மோசடிக்கு விகடன் பதில் சொல்லுமா?

Image may contain: 1 personஇனி தேசபக்தர்கள் அலுவலகம் புகுந்து கேட்காமல் ஆனந்த விகடன் திருந்தாது

ஆறிபோன விஷயங்களை மறுபடி தோண்டி எடுப்பதாக சொல்லிகொள்கின்றது, அதாவது ஆகஸ்டு 4, 1987ல்தான் பிரபாகரன் சுதுமலையில் பெரும் பிரகடனம் செய்தாராம்.

இப்பொழுது அந்த கதை எதற்கு என்றால்? எல்லாம் காசி ஆனந்தன், சீமான் வகைகளை வளர்த்து விடுகின்றார்களாம்.

அந்த சுதுமலை பிரகடனம் பற்றி யாருக்கு தெரியாது, இந்தியாவினை நம்பி நம் ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம் என சொன்னார் பிரபாகரன், கூட்டம் ஆர்பரித்தது. இதனை எதிர்பார்க்கா பிரபாகரன் முகம் இருண்டது,சுருண்டது பின் ஏதோ பேசி மேடையினை விட்டு இறங்கினார்.

இந்த விகடன் சட்டையினை பிடித்து கேட்கும் கேள்வி ஒன்றுதான்

இதே சுதுமலையில் ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம் என சொன்னார் அல்லவா பிரபாகரன், பின் அடுத்த இரு மாதத்தில் இந்தியாவோடு மோத அவருக்கு ஆயுதம் எங்கிருந்து வந்தது?

எல்லா ஆயுதங்களையும் ஒப்படைத்திருந்தால் எப்படி இந்திய ராணுவத்தை அவர் தாக்கியிருக்க முடியும்?

ஆக மேடையில் சொன்னபடி அவர் நடக்கவில்லை என்பது புரிகின்றதா இல்லையா? ஆயுதங்களை மறைத்து வைத்துவிட்டுத்தானே மக்கள் முன் அப்படி பேசி ஏமாற்றி இருக்கின்றார்.

இது சிறு குழந்தைக்கு கூட தெரியுமே விகடன் குழுமமே

இதனை எல்லாம் செய்தி என சொல்லி பிரபாகரனின் மோசடிகளை வெளிகொணருவது உங்கள் நோக்கம் என்றால் அதனை எங்களிடமே சொல்லிவிடலாமே, ஏன் நீங்கள் எழுதவேண்டும்?

மாறாக நீங்கள் ஏதோ திட்டத்துடன் எழுதுவதாக, யாருக்கும் ஒன்றுமே தெரியாது, அதனால் புலிகள் மீது அனுதாபம் கொண்டு வருவதாக எழுதும் நோக்கம் இருந்தால் விடுவதாக இல்லை

இப்படி எல்லாம் பொய்களை எழுதும் விகடன், வடமாராட்சியில் புலி சுற்றபட்ட நிலையில். இந்தியா களமிறங்கிய காட்சி, அதற்கு முன் 1983ல் இந்தியா களமிறங்கிய காட்சியெல்லாம் ஏன் சொல்லவில்லை?

தேசபக்தி இருந்தால் சொல்லும், இது அந்நிய நாட்டு தீவிரவாத இயக்கத்தையும், இங்கிருக்கும் பிரிவினைவாதிகளையும் ஆதரிக்க கிளம்பிய பின் எங்கிருந்து சொல்லும்?

விகடன் பத்திரிகை மிகபெரும் தேசதுரோகத்தை செய்துகொண்டிருக்கின்றது, மோடி அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவிடம் தங்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதாக சொன்ன புலிகளுக்கு , இந்திய ராணுவத்தோடு மோதுவதற்கு ஆயுதம் எங்கிருந்து கிடைத்தது?

புலிகளின் இந்த மோசடிக்கு விகடன் பதில் சொல்லுமா?