புலிகளின் கொடியினை திருடினாரா சீமான்?
புலிகளின் கொடியினை திருடினாரா சீமான், பரபரப்பு குற்றசாட்டுகள்
இதிலென்ன பரபரப்பு?
விஷயம் ஒன்றுமில்லை, ஆங்காங்கே நாம் தமிழர் கொடியினை தமிழகத்தில் கீழே போட்டு மிதிக்கின்றார்கள், முகம் துடைக்கின்றார்கள். இன்னும் எங்கெங்கோ துடைத்து எறிகின்றார்கள்.
இது நமக்கு பழகிய விஷயம், தேசிய கொடியினையே எது மேல் வண்ணம் எது கீழ்வண்ணம் என்பது அமைச்சர் பெருமக்களுக்கே தெரியாது
தேர்தலில் கட்சிகொடி பிடிப்பதும் பின் அதனை கீழே போட்டு மிதிப்பதும் நமது கலாச்சாரம்
ஆனால் புலிகள் கொடியினை , ஈழத்தவர் அப்படி பார்ப்பதில்லை. புலிகளின் தலைவர் மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், அவர் முரட்டு பிடிவாத முட்டாளாக இருக்கலாம்
ஆனால் உயிர்கொடுத்து போராடிய புலிகள் நிச்சயம் நினைவில் நிற்பவர்கள். அவர்கள் அர்ப்பணிப்பு போற்றதக்கது, செத்தால் நாடு கிடைக்கும் என் சொன்னால் தயக்கமின்றி சாவின் எந்த எல்லைக்கும் செல்லுமளவு அவர்கள் அர்பணிப்பு இருந்தது
உலகில் எந்த இயக்கத்திலும் இல்லா அர்ப்பணிப்பது அது, ஒத்துகொள்ள வேண்டும். தலைவன் தான் சரியில்லையே தவிர, அந்த போராளிகள் மகத்தானவர்கள்
அந்த தூய வீரர்கள் பிடித்த கொடி அது, அக்கொடி நிச்சயம் ஈழத்தில் போராடி செத்தவர்களின் பெரும் அடையாளம், கால எழுச்சியின் அடையாளம்
அந்த கொடியின் சாயலை உருவி அங்கிள் சைமன் கொடி செய்து, அது தமிழகமெங்கும் மிதிக்கபடுவதை பலர் விரும்பவில்லை
இதனை வைகோ சரியாக பிடித்துகொண்டு புலிகளின் கொடியினை கேவலபடுத்துகின்றார் சீமான் என கிளம்பிவிட்டார்
இது எளிதில் தீரும் விஷயமல்ல, நிச்சயம் அங்கிள் சைமனுக்கு நெருக்கடியே
அது ஈழப்புலி, நான் தமிழ்புலி என அங்கிள் சைமன் கதை விட்டாலும் எடுபடாது
ஆக அங்கிள் சைமன் ஆதித்தனாரிடமிருந்து கட்சி பெயரையும். புலிகளிடம் இருந்து கொடியினையும் திருடியிருக்கின்றார்
எவனோ ஒரு கிறிஸ்தவ பாஸரிடம் இருந்து அல்லேலூயா என கத்தும் ஸ்டைலை காப்பியடித்து , “என் உறவே” , “இனமே” என மாற்றிகொண்டார்
அப்படி எங்கெல்லாமோ திருடித்தான் இங்கு வோட்டு திருடவும் வந்திருக்கின்றார்
ஆக கட்சிபெயர் இனி “நாம் திருடர்கள்”, கட்சிகொடியில் இனி புலிக்கு பதிலாக இடம்பெறும் விலங்கு நரி
வாழ்க நரிகுட்டி, வளர்க அங்கிள் சைமன் பணப்பெட்டி