புலிகளின் மாயகோட்டை சரிந்தது
2006ல் புலிகளை தடை செய்தது அமெரிக்கா, அதை தொடர்ந்து கனடாவும் ஐரோப்பிய யூனியனும் தடை செய்தது
போர்காலங்களில் சிங்கப்பூர் தடை விதித்தது
சீனாவில் எக்காலமும் தடை அது போக இலங்கைக்கு கப்பல் கப்பலாக ஆயுதம் அளித்தது
ரஷ்யாவும் ஈரானும் பாகிஸ்தானும் கூட இலங்கைக்கு உதவின
ஆக உலகமே சேர்ந்து ஒரு அடாவடி கூட்டத்தை இலங்கையில் அடித்து கொன்றது, ஆனால் இந்தியாவும் காங்கிரசும் கருணாநிதியும்தான் இனத்தை அழித்தார்கள் என ஒரு கூட்டம் சொல்லிகொண்டிருக்கின்றது
இன அழிப்பு என்பது என்ன என்பதை ஐ.நாவுக்கான இலங்கை தூதர் இப்படி குறிப்பிட்டார்
“எம் நாட்டில் யாழ்பாணம் எனும் தமிழர் நகரில் நாம் தாக்கவில்லை, கொழும்பு தமிழருக்கும் கிழக்கு மாகாண தமிழருக்கும் சிக்கல் இல்லை,
நாம் வன்னி தமிழ்மக்களை கொடூர புலிதீவிரவாதிகளிடம் இருந்து விடுவிக்க போர் நடத்தினோம், புலிகளே அவர்களை பிடித்து வைத்து அழிவினை கொடுத்தனர், புலிகள் அவர்களை விடுவித்திருந்தால் போரே நடந்திருக்காது
புலிகளை கொன்று அம்மக்களை காப்பாற்றியபின் எந்த தமிழரை எம் ராணுவம் தொட்டது?”
இந்த வாதத்துக்கு யார் எதிர்பதில் கூறமுடியும்? உலக நாடுகள் ஏற்றுகொண்டன. ராஜபக்சே தப்பித்தது இப்படித்தான்
உண்மை இப்படி இருக்க இங்கிருந்து கொண்டு இனபடுகொலை , இந்தியா இனபடுகொலை செய்தது என ஏக ஒப்பாரி
புலிகளை ஒழித்த பொன்சேகா சொன்னார்
“எம் ராணுவத்தினர் சிலருக்கு லஞ்சம் கொடுத்து அதில் ஊடுருவித்தான் புலிகள் பலமாயிருந்தனர், பணம் ஒன்றே அவர்கள் ஆயுதம்.
எம் கருப்பு ஆடுகளை களை எடுத்தபின் புலிகளின் மாயகோட்டை சரிந்தது
மற்றபடி தமிழக அரசியல்வாதிகள் எல்லாம் கோமாளிகள், சிரிக்க வைக்கும் விஷயமாக சொல்லிகொண்டே இருப்பார்கள்”
