புலிகள் அழிந்த கதையினை சொல்லும் முன்னாள் புலி

புலிகள் வீழ்ந்த கதையினை ஒரு முன்னாள் போராளி எழுதிகொண்டிருகின்றார், புலிகள் விழ மகா முக்கியமான காரியமாக அவர் சொல்வது புலிகளின் ஆயுத கடத்தல் விவகாரம் கே.பத்மநாபனிடம் இருந்து கேஸ்ட்ரோ என்பவரிடம் வந்தது

கேஸ்ட்ரோ என்பவர் சக்கரநாற்காலி வகையறா, வன்னிகாட்டுக்குள் இருந்தவர். இவர் எப்படி ஆயுதம் வாங்குவது என யோசித்தபொழுது தமிழக பாதிரியார் ஒருவர் நான் வாங்கிதருகின்றேன் என முன்வந்தாராம்

பாதிரி திருப்பலியில் நற்கருணைதானே வழங்குவார்? ஆயுதமுமா வழங்குவார் என விசாரித்த தரப்பு ஏற்கனவே அந்த தமிழக பாதிரியின் மோசடிபற்றி எச்சரிக்கை விடுத்திருக்கின்றது

ஆனால் காஸ்ட்ரோவோ இல்லை இல்லை மக்களின் பாவமன்னிப்புக்காக கிறிஸ்துவிடம் மன்றாடும் பாதிரி தன் பாவங்களுக்காகவும் மன்றாடிவிட்டார், நமக்கு ஆயுதம் வாங்கி தருவார் என நம்பி இருகின்றார்

ஆயுதம் என்பது போப்பாண்டவரிடம் ஜெபமாலை வாங்குவது போல் எளிதானதா? நரிவேட பாதிரியின் வேடம் கலைய ஆயுதம் வரமுடியாமல் போக சிங்களன் புலிகளை போட்டு சாத்தி அழித்திருக்கின்றான்

பாதிரி அறிமுகபடுத்திய ஆட்கள் எல்லாம் வெளிநாட்டு அரச உளவாளிகள், சட்டென்று புலிகளின் ஆட்களை பணத்தோடு அமுக்கி அந்நாட்டு சிறையில் தள்ளிவிட்டார்கள்

ஆனால் பாதிரி மட்டும் கைதுசெய்யபடவில்லை என்பதுதான் மகா மர்மம்

ஈழ அழிவிற்கு காரணமான பாதிரி, அவ்வப்போது தமிழகத்திலும் இன உணர்வு, தமிழ் உணர்வு என பேசிவருகின்றார் அந்த யூதாஸ்

இப்படியாக புலிகள் அழிந்த கதையினை சொல்கின்றார் முன்னாள் புலி, அழிவுகளை அருகிருந்து பார்த்த புலி

ஆச்சரியம் என்னவென்றால் அந்த பாதிரிதான் இங்கு காங்கிரஸ் ஒழிக, புலிகளை ஒழித்த இந்தியா ஒழிக என சாபம் எல்லாம் இட்டுகொண்டிருந்தவர் , அந்த கப்ஸர்

பரமபிதா அந்த போலிபாதிரியினை மன்னிக்காமலே போகட்டும்