புலிகள் இயக்கத்து இயக்கமே பொட்டு அம்மான்

Image may contain: 1 person

ஒரு விஷயம் சலசலக்கின்றது, அந்த விஷயத்திற்கு போகுமுன் ஒரு முன்னோட்டம் பார்க்கவேண்டும்

புலிகள் இயக்கம் மீது ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் அதில் இருந்த பிராதான வித்தகர்களின் திறமைகள் கொஞ்சம் அல்ல, ஜெகஜால கில்லாடிகள்

எந்த முற்றுகையினையும் உடைக்கும் பால்ராஜ், வளைத்து அடிக்கும் கருணா, எந்த நாட்டில் இருந்தும் அசால்ட்டாக ஆயுதம் கடத்தி வந்த கே.பி. மிக மிக கவனமாக செயல்பட்ட கிடைக்கும் ஒற்றை நொடியில் பெரும் திருப்பங்களை கொடுக்கும் பொட்டு அம்மான் என்னும் சன்முகலிங்கம் சிவசங்கரன் எனும் வரிசை பெரிது

அதுவும் முள்ளிவாய்க்காலில் சுற்றிவளைக்கபட்டபொழுது கூட இந்தோனிஷிய மாலுமிகள் உதவியோடு பொருள்களை கடத்தி வந்தவர் பொட்டு அம்மான்

உண்மையில் புலிகள் இயக்கத்து இயக்கமே அவர்தான், பிரபாகரன் என்பவர் வெறும் முகமூடி

அமைதிபடை காலத்தில் சுற்றி வளைக்கபட்ட நிலையில் நொடியில் எந்த திசையில் தப்பினால் குறைந்த சேதாரம் என கணக்கிட்டு வயிற்றில் குண்டுபாய்ந்து தப்பியவர், இந்திய ராணுவம் அசந்துதான் நின்றது.

இது புலிகளை கவனித்தோருக்கு தெரியும். அதனால்தான் ராஜிவ் கொலைமுதல் 2009ல் அமைதிபேச்சு வரை இந்தியா பொட்டு அம்மானை கொடுத்தால் போதும் என்ற கோரிக்கையினை வைத்துகொண்டே இருந்தது

புலிகளின் மூளை அந்த பொட்டு அம்மானே, மிக பெரும் சாமார்த்தியசாலி அவர், பிரபாகரன் என்பது சும்மா

பிரபாகரன் ஜெயா என்று வைத்தால், பொட்டு அம்மானே சசிகலா மற்றும் நடராஜன். இதற்கு மேல் விளக்க முடியாது

தனியாக பிரபாகரனை தமிழ்செல்வனை போல போட்டு தள்ள அதிக நேரம் எடுத்திருக்காது, ஆனால் பிரபாகரன் இல்லை என்றாலும் இவர்களை கொண்டு இயக்கம் வளர்ந்திருக்கும் அதனால் எல்லா வித்தகர்களையும் இல்லாமல் செய்துவிட்டு கடைசியாக பிரபாகரனை முடித்தார்கள்

முள்ளிவாய்க்காலில் பிரபாகரனுக்கு கொள்ளிவைத்தாலும் கூட பொட்டு என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாது, சிங்கள ராணுவமும் அதைபற்றி மூச்சு விடாது

அவரின் உடல் கண்டெடுக்கபடவில்லை, மனிதர் அகபடவுமில்லை, நிச்சயம் தப்பியிருக்க 100% வாய்ப்பு இருக்கலாம்

இந்தியாவும், இலங்கையும் இன்னும் பொட்டு அம்மான் குறித்து ஒரு முடிவுக்கும் வரவில்லை, திகைக்கத்தான் செய்கின்றன‌

இப்பொழுது இவர் கதை எதற்கு என்றால் விஷயம் இருக்கின்றது

என்ன ஆனாலும் திமுகதான் ஈழதமிழருக்கு உதவமுடியும் மற்றவர்கள் எல்லாம் சும்மா எனும் முடிவுக்கு தலைமறைவாக இருக்கும் பொட்டு அம்மான் வந்துவிட்டதாகவும் அவர் சொற்படி கேட்டுத்தான் வைகோ திமுக பக்கம் சென்றதாகவும் செய்திகள்

இதனை ஏற்கவும் முடியாது, அதே நேரம் 100% மறுக்கவும் முடியாது

ஆனால் இத்தகவலை கிளப்பிவிட்டது யார் என்பது ஊகிக்க கூடியது, காரணம் அரசியல் கணக்குகள்

ஏற்கனவே புலிகளால் கடும் சூடுபட்ட திமுக இன்னொருமுறை அந்த விஷபரிட்சையில் இறங்காது எனினும், இப்படியே வைகோ திமுகவில் ஒட்டி பின்னாளில் ஏதும் விபரீத திட்டங்களில் இறங்கலாம் எனும் யூகங்களும் பறக்கின்றன‌

வைகோ பொட்டு அம்மான் உறவுகள் 35 ஆண்டுகாலம் தொடர்ந்து வருவது என்பதால் எல்லா யூகங்களும் சாத்தியமே

இப்பொழுது வருவது ஒரே ஒரு சந்தேகம்தான்

திமுக மட்டும்தான் ஈழதமிழருக்கு ஏதும் செய்யமுடியும், அதிகாரத்திற்கு வரபோவது அவர்கள்தான் என்பது மிகசரியான கணக்கு, அதனால் வைகோவினை அனுப்பியிருந்தாலும் சரியான கணக்கு

ஆனால் பிரபாகரனின் தம்பி, பிரபாகரன் என்னிடம் போராட்டத்தை ஒப்படைத்தார் என சொல்லும் சீமானை அல்லவா அனுப்பியிருக்க வேண்டும்

பின் வைகோ எப்படி?

வைகோ பொட்டு அம்மானின் ஆள் என்பது உறுதிசெய்யபட்ட விஷயம்,

அப்படியானால் எதிர் கோஷ்டி ஒன்று திமுக பலம் பெற கூடாது, ஆட்சிக்கு வரவே கூடாது, வந்தால் ஈழதமிழர் விவகாரங்களில் தலையிடும் என அஞ்ச வேண்டுமே, அதை தடுக்க தமிழகத்தில் ஒரு ஆள் அமர்த்த வேண்டுமே

யார் இருக்கின்றார்கள்? அங்கிள் சைமன் அட்டகாசமாக இருக்கின்றார்

ஆக வைகோ புலிகளின் நபர் என்றால், அங்கிள் சைமன் ராஜபக்சே உட்பட்ட சிங்களர்களில் நபர் என்றுதான் முடிவாகின்றது