புலிகள் கொடி அறிமுகபடுத்தியபொழுது சீமான் எங்கிருந்தார்?
அமைதிபடை வெளியேறிய பின் ஈழத்தின் ஏகபோக சக்தியான புலிகளின் கொடி எங்கும் பறந்தது
யாழ்பாண அரசராக முடிசூடிகொண்டார் பிரபாகரன், அரசன் ஆனால் போதுமா கொடிவேண்டாமா?
ஏற்கனவே இருந்த புலிகளின் கொடியில், விடுதலை புலிகள் என்ற பெயரை எடுத்துவிட்டு இதுதான் இனி ஈழத்திற்கே கொடி என அறிவித்தனர்
இதே நவம்பர் 21ல் அறிவித்தனர்
அங்கிளுக்கும் அவர் பின்னால் உள்ள மங்கிகளுக்கும் இது தெரியாது என்பதில் ஆச்சரியமில்லை, அவர்களுக்கு எதுதான் தெரிந்தது?
(சொல்லிவிட்டோம் அல்லவா?
இன்னும் கொஞ்ச நேரத்தில் குதிப்பார்கள், தமிழன் எழுச்சிநாள், தமிழன் மானம் பட்டொளி வீசி பறந்த நாள் (அப்படியேதான்) என கதறுவார்கள்)
அங்கிள் சைமனின் கொடிக்கே வழிகாட்டிய கொடி அது
மிஸ்டர் சைமன், கொஞ்சமாவது நன்றி விசுவாசம் இருந்தால் இன்றைக்கு ஏதாவது சொல்ல வேண்டாமா?
எப்படி சொல்லவேண்டும்?
“இதே கொடியினை என்னிடம் ஒப்படைத்து, இதனை வருடா வருடம் நவம்பர் 21ல் ஏற்றடா தம்பி..” என சொன்னான் என் அண்ணன்
புலிகள் கொடி அறிமுகபடுத்தியபொழுது சீமான் எங்கிருந்தார்? வன்னி காட்டுக்குள்ளா? இல்லை
பாரதிராஜாவிடம் அசிஸ்டெண்டாக சேர கோடம்பாக்கத்தில் அலைந்துகொண்டிருந்தார்
நான் முதல்வரானால் ஆங்கிலத்தில் கையெழுத்து போடும் காசோலைகள் செல்லாதுன்னு உத்தரவிடுவேன் : சீமான்
எங்கே? ஆங்கில நாடுகளின் பெயர்களை தாங்கும் டாலரும், யூரோவும் தேவையில்லை, ரிசர்வ் வங்கி கவர்ணர் ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட இந்திய பணத்தை தொடமாட்டான் இந்த சீமான் என சொல்லுங்கள் பார்க்கலாம்