புலிகள் சிங்கள பாஸ்போர்ட்டில் உலகம் சுற்றலாம்?

கனிமொழி பதவியினை காப்பாற்ற கலைஞர் ஈழபோரினை நிறுத்தவில்லை என்கின்றது ஒரு கூட்டம்

சிங்களனை எதிர்த்து யுத்தம் புரிந்தான் பிரபாகரன், அவன் மகள் சிங்கள பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்று படிக்கலாம், அவன் குடும்பம் பறக்கலாம்

புலிகள் சிங்கள பாஸ்போர்ட்டில் உலகம் சுற்றலாம்

இதை பற்றி எவனாவது பேசுவானா?

அமைதிபடை காலத்திலே பிரேமதாசாவோடு கை கோர்த்தவர் புலிகள், என்னதான் சண்டை என்றாலும் சிங்களனுக்கும் புலிகளுக்கும் ஒரு புரிந்துணர்வு இருந்திருக்கின்றது

புலிகளின் குடும்பமோ, ஏன் பிரபாகரனின் குடும்பம் கூட சிங்கள விமான நிலையங்களை சிங்கள பாஸ்போர்ட்டுடனே கடந்திருக்கின்றார்கள்

கேட்டால் விழுந்துவிடாத வீரம், மண்டியிடா மானம், சிங்களனுக்கும் புலிகளுக்கும் ஜென்ம பகை …

புலிகள் ஒருகாலும் மானத்தால் குறைந்தவர் இல்லை என மார்தட்டுவது

பிரபாகரனுக்கும் சிங்களனுக்கும் இருந்த உறவுகளை படித்துவிட்டு கலைஞர் பக்கம் வாருங்கள்


சசிகலாவினை உள்ளே தள்ளினால் அருமையான தீர்ப்பு நீதி வென்றது

தா.கிருட்டினன் கொலை வழக்கில் நீதி வென்றது

கனிமொழி விடுதலையில் அநீதி ஒழிந்து, நீதி வானளவு உயர்ந்தது

ஆனால் 11 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் செல்லாது என அறிவிக்க முடியாது, சபாநாயகர் தீர்ப்பில் நீதிமன்றம் தலையிடாது என சொன்னால் நீதி செத்துவிட்டதாம்

இதுதான் நீதி என இவர்களாக எண்ணிகொண்டு நீதிமன்றம் போக வேண்டியது, அது கிடைக்காவிட்டால் உடனே 4ம் தூண் சரிந்தது, நீதி தேவதைக்கு பக்கவாதம் என அழவேண்டியது

தீர்ப்பு சரியாகத்தான் சொல்லபட்டிருக்கின்றது, ஆட்சியினை கலைக்க வேறு வழி தேடுங்கள்