புல்தின்ற கல்நந்தி , மிலேச்சர் மிரண்ட வரலாறு
இலஙகையில் உள்ள இந்துமத ஸ்தலங்களை சொல்லமுடியுமா என சிலர் கேட்டார்கள், அந்த தீவில் சைவம் எக்காலமும் உண்டு, ராவணன் சீதையினை சிறைவைத்த வகையில் வைஷ்ணவ அடையாளமும் உண்டு
பின்னாளில் பவுத்தம் வந்தாலும் சிங்களவரில் பலர் இன்றும் இந்துக்களே, எப்படியான இந்துக்கள் என்றால் கதிர்காமம் முருகன் ஆலயத்தை மிக புனிதமாக போற்றி வணங்கும் சுத்தமான இந்துக்கள், இன்றும் கதிர்காமம் ஆலயம் அவர்கள் கட்டுபாட்டில்தான் உண்டு
நல்லூர் கந்தசாமி கோவில் உலகெல்லாம் அறிந்த சிறப்புடையது, திரிகோணமலை சிவன் கோவில் நாயன்மார்களால் பாடவும் பட்டது
அப்படியான இலங்கையில் வற்றாபளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் கடல் நீரில் விளக்கு எரிவது வாடிக்கை, வைகாசி மாதத்தை ஒட்டிய காலங்களில் கண்ணகி அம்மன் ஆலயத்தை அண்டிய அந்த விநாயகர் கோவில் அருகே அந்த அதிசயம் நடக்கும்
ஒருவாரம் தொடர்ந்து கடலில் எடுக்கும் நீர் விளக்காய் எரியும், எல்லா வருடமும் அந்த அதிசயம் உண்டு இன்றுவரை யாரும் அதை விஞ்ஞானபூர்வமாக நிருபித்ததில்லை
நமிநந்தி அடிகள் எனும் நாயனார் திருவாருரீல் நீரில் விளக்கெரித்தார், அந்த தொடர்ச்சியோ என்னவோ அந்த கடலுக்கு நந்தி கடல் என பெயர், இன்றும் நந்தி கடல் நீர் ஆண்டுதோறும் எரியும்
அப்படியான அதிசயங்கள் நிறைந்த இலங்கையில் கொக்கொட்டி சோலை சிவன் கோவிலும் பிரசித்தியானது, ஒரு வகையில் அது உலகபுகழ் பெற்றது அங்கு நடந்த அதிசயம் அப்படி
அந்த இலங்கை தீவின் சிறப்பு அது ஆப்கானிய ஆளுகைக்கு கீழ் வரவில்லை கடல் அதனை காத்து கொண்டது, இதனால் இந்தியாவில் ஏற்பட்ட நெருக்கடிகள் அங்கு இல்லை
ஆனால் நெருக்கடிகள் பின்னாளைய ஐரோப்பிய ஊடுருவலில் வந்தது
அப்பக்கம் மிக கடுமையான மதமாற்றம் நிகழ்த்தபட்டு கொண்டிருந்தது, இந்தியாவின் கோவா பகுதியினை போல இந்து ஆலய அழிப்பும் மதமாற்றமும் தீவிரமாக இருந்தன
கிறிஸ்தவ மதமாற்ற வெறி அந்த அளவு உச்சத்தில் இருந்தது, கண்ணில் பட்ட இந்து ஆலயங்களை எலலம் உடைத்து போட்டு அதன் மேல் சர்ச் கட்டி சிலுவை நட்டு பெரும் அட்டகாசங்களை அக்கும்பல் செய்தது
அவ்வகையில் இந்த பழமையான கொக்கட்டி கோவிலுக்கும் நாள் குறிக்கபட்டது
மிஷனரி அதிகாரிகள் சென்று இந்த ஆலயம் இனி இருக்க கூடாது என்றும், அவர்களே கைவிட்டு சென்றுவிடும் படியும் அனைவரும் கிறிஸ்தவமதம் மாறும்படியும் இல்லையேல் கூண்டோடு அழிவீர்கள் எனவும் மிரட்டி சென்றான்
போர்ச்சுகீசியர் கால்வைத்த காலங்களில் இது நடந்தது
ஆனால் அர்ச்சகர்களும் மக்களும் அசைந்து கொடுக்கவில்லை, மிஷனரிகள் சூழ்ந்து கொண்டு துப்பாக்கி சகிதம் மிரட்டினார்கள் உள்ளே புகுந்து சிவலிங்கத்தை எறிய துடித்தார்கள்
ஒரு கட்டத்தில் அர்ர்சகர்களும் மக்களும் சூழ்ந்து கொள்ள அந்த மிஷனரிகள் ஆத்திரத்தில் போர்ச்சுகீசிய ராணுவத்திடம் சொல்லிவிட்டார்கள்
“இயேசுவினை ஏற்காத கூட்டம் இருக்கவே கூடாது” என தன் பீரங்கி சகிதம் சென்றான் அதிகாரி
“ஏ காட்டுமிராண்டி கூட்டமே, ஒழுங்காக எங்கள் இயேசுவினை ஏற்றுகொண்டு இந்த சாத்தானை கைவிடுங்கள், இவை எல்லாம் பேய்கள் பிசாசுகள் இயேசுவே உண்மையான தெய்வம், அதனை ஏற்காவிட்டால் இந்த கோவிலை தகர்ப்பேன்” என மிரட்டினான்
மக்கள் அசைந்து கொடுக்கவில்லை
காலையில் வருவேன் அதற்குள் முடிவெடுங்கள் என சொல்லிவிட்டு திரும்பினான்
மக்களும் அர்ச்சகர்களும் இரவெல்லாம் பூஜை செய்தனர், அழுது அழுது கண்ணீர்விட்டு கதறினர், உயிரினும் மேலான சிவாலயம் இனி இருக்காதோ, இந்த சிவனை கல் என பீரங்கியால் உடைப்பதோ என அழுது கரைந்தனர்
ஒரு அர்ச்சகர் காதில் மட்டும் குரல் கேட்டது “அஞ்ச வேண்டாம் நாளை அதிசயம் காண்பாய்”
அந்த உறுதியோடு மறுநாளை கலக்கமான காலை பொழுதை எதிர்கொண்டனர், அந்த அதிகாரி வழக்கமான எகத்தாளத்தோடு வந்தான்
“நீங்கள் இன்னும் கலைந்து செல்லவில்லையா? கோவிலோடு உங்களையும் கொல்லட்டுமா?
எங்களை கொன்றபின் கோவிலை இடியுங்கள் அதுவரை விடமாட்டோம்
ஏ பைத்தியங்களே, இந்த கல்லும் காளை சிலையுமா தெய்வம்? இவற்றை நம்பியா இதுகாலமும் வாழ்ந்தீர்கள்? எங்கள் இயேசு சக்திவாய்ந்தவர், அவர் இந்நாட்டை எங்களுக்கு தந்து உங்களை அடிமையாக்கியிருக்கின்றார், நல்லவர்களாகிய நாங்கள் உங்களை எங்கள் மதத்தில் சேர்த்து வாழவைப்போம், இந்த சாத்தானை விடுங்கள் இயெசுவினை நம்புங்கள்
என்ன சொன்னாலும் சரி, அது கல்லோ சாத்தானோ எதுவோ எங்கள் தெய்வம் அதை தரமாட்டோம், எங்கள் சிவன் எல்லா இடத்திலும் இருப்பார், சாத்தான் என்றாலும் அது அவரின் வடிவமாக நம்புபவர்கள் நாங்கள் கோவிலை விடமாட்டோம்
அட அரை பயித்தியங்களே, இந்த காளை சிலை வரலாறு தெரியுமா? இவை எல்லாம் பாவம்
அல்ல, இது எங்கள் நம்பிக்கை எங்களை கயிலாயம் சேர்க்கும் நம்பிக்கை
காட்டுமிராண்டிகளே இனி பொறுக்கமாட்டேன், இந்த காளை புல் தின்னுமோ பார்க்கலாமா” என சொல்லியபடி அருகிருந்த புல்லை பிடுங்கினான்
பூட்ஸ் காலோடு கோவிலுக்குள்ளும் நுழைந்தான்
“சிவனே… எங்கள் சிவனே…” என அலறியது கூட்டம், இனி அலறினால் சுட்டுவிடுவேன் என்றவன் நந்தி முன்னால் சென்று “ஹேய் இட் திஸ்” என புல்லை வாயில் திணித்தான்
நந்தி அதன் போக்கில் இருந்தது
“ஏய் முட்டாள்களே, இதையா வணங்கினீர்கள், இந்த கல்லை இடிக்க போகின்றேன் , அதற்கு முன் லிங்கம் எனும் இந்த கல்லை உடைப்பேன்” என பூட்ஸ் காலை முன் வைத்தான்
அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது
லிங்கம் பொன் உருவவில் தீயாக நின்றது, அந்த நொடியில் நந்தி அவன் கையில் இருந்த புல்லை வாங்கி தின்றது
நம்பமுடியா அதிர்ச்சியில் அலறினான் அதிகாரி, அதையும் தாண்டி சாணமும் இட்டது
“ஓ காட்” என அலறியவன் அவசரமாக வெளியேறினான், அவனை விரட்டி விரட்டி அடித்தது நந்தி, அவன் தன் படைகளோடு தலைதெறிக்க ஓடினான்
நந்தி பின் வந்து கல்லாய் சமைந்தது
அந்த அதிகாரி அதன்பின் அப்பக்கம் வரவே இல்லை மாறாக காணிக்கை பல கொடுத்து காவல் இருந்தான், அதன் பின் சைவ அழிப்பு அங்கு தடுக்கபட்டது
இந்த வரலாறு ஐரோப்பிய மிலேச்சர் கால குறிப்புகளில் உண்டு, அதை தாண்டி எல்லா மடங்களிலும் உண்டு
அதனை கண்ணார கண்ட சாட்சிகள் தங்கள் வாரிசுகளுக்கு சொல்லி வைத்த வரலாறும் உண்டு
இதே காட்சி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் நடந்தது, துக்ளக் யானை சிலைக்கு கரும்பு கொடுக்க அது உண்டு அவனை விரட்டிய காட்சி உண்டு
ஆனால் அதுபற்றிய கல்வெட்டோ ஆதாரமோ இங்கு இல்லை
இலங்கை கொக்கட்டி சாலை இந்துக்கள் அப்படி அல்ல, அந்த வரலாற்றை முழுமையாக ஆவணபடுத்தி வைத்திருக்கின்றார்கள்
இந்துக்களின் நம்பிக்கை என்பது பொய்யல்ல அது மூட நம்பிக்கையும் அல்ல, இந்துமதம் என்பது சாத்வீகமானதுதான் ஆனால் அதுவழிபடும் தெய்வங்கள் சக்திவாய்ந்தவை
சைவ பூமியான இலங்கை இப்படி எண்ணற்ற இந்து பெருமைகளையும் நம்பமுடியா அதிசயத்தையும் தாங்கி நிற்கின்றது
இலங்கை மட்டகிளப்பின் கொக்கட்டி சோலை ஆலயம் இன்றும் நந்தி உயிர்பெற்று மிலேச்சனை விரட்டியதன் சான்றாய் நிற்கின்றது
இப்படிபட்ட இந்து ஆன்மீக பூமியின் தமிழருக்கு, இந்து தமிழருக்கான போராட்டத்தை “இந்து தமிழர்” என சொல்ல்லாமல் வெறும் தமிழர் என சொல்லி இந்திய இந்துக்களுடன் இருந்து பிரித்து கொடிய யுத்தத்தை பிரபாகரன் என்பவன் மூலம் மிஷனரிகள் உருவாக்கினார்கள்
அதனை தமிழக மிஷனரி முகமான திராவிடமும் ஆதரித்தது ,என்னவெல்லாமோ நடந்து முடிந்தது
இன்று தமிழக இந்துவுக்கு பிரபாகரனும் அவன் செய்த கொலைகளும் தெரியும்
ஆனால் வற்றாபளை கண்ணகி அம்மன் ஆலயம், கடல்நீரில் எரியும் விளக்கு, புல்தின்ற நந்தி ஆகிய ஈழ பெருமைகள் தெரியாது
அந்த அளவு இங்கு சைவபெருமை மறைக்கபட்டிருக்கின்றது
இந்திய இந்துக்கள் இலங்கைக்கு ஆன்மீக பயணம் செய்ய பெரும் வழி செய்தலே அங்கு சிக்கல் தீர வழி, உறவு பலபட வழி
வெறுமனே டமில் டமிலர் என இந்து வெறுப்பில் அம்மக்கள் திசைமாறி சென்ற அவலம் போதும், இரு நாடுகளும் இழந்த இழப்பும் போதும்
பழைய சைவ வைணவ இலங்கை தொடர்புகளை மீட்டு, இருநாட்டு இந்துக்களும் திருபயணங்கள் செய்ய வழிசெய்தாலே எல்லாம் சரியாகிவிடும்
இலங்கைக்கு செல்வோர் அந்த கொக்கட்டி சோலை நந்தியினை காண மறக்காதீர்கள், மாபெரும் அதிசயத்தை சிவன் செய்த திருதலத்தின் நந்தி அது


அருமையான பதிவு. அற்புதமான நிகழ்வு. ஓம் நமசிவாய