பெங்களூரு மேயராக தமிழர் தேர்வு
பெங்களூரு மேயராக தமிழர் தேர்வு
இந்திய ஒருமைபாட்டிற்கு இது நல்ல எடுத்துகாட்டு, வாழ்த்துக்கள்.
தமிழனை இந்தியாவெங்கும் அடிக்கின்றான் என ஒப்பாரியிடும் கூட்டம் இப்பொழுதெல்லாம் பேசாது
ஏம்பா சீமான், தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும், பெங்களூரை பெங்களூர்காரன் ஆளவேண்டும் அதனால் இவர் ராஜினாமா செய்யவேண்டும் என இப்பொழுது சொல்லுங்கள் பார்க்கலாம்.
சூன்யம் வைத்தல், மண் சோறு உண்ணுதல், இலையில் புரளுதல், தீ மிதித்தல் இன்னபிற மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கர்நாடகாவில் புதிய சட்டம்
கர்நாடகாவில் இப்பொழுதெல்லாம் ஒரு மவுன புரட்சி நடக்கின்றது, பெரியார் அதிகம் தேடபடுகின்றார். அவர் கொள்கைகளை தேடி பிடித்து படிக்கின்றார்கள்.
பெரியார் கன்னடர்களுக்குள் வேகமாக பரவுகின்றார். அவரின் பல கொள்கைகள் கன்னடத்தில் சட்டமாகின்றன
இவ்வளவிற்கும் தேசிய கட்சிகள் ஆளும் மாநிலம்.
ஆனால் பெரியார் வாரிசுகள் என சொல்லி திராவிட கட்சிகள் ஆண்ட தமிழகத்தில் பெரியாரை மறந்துவிட்டு மூடநம்பிக்கைகள் வளர்ந்திருக்கின்றன.
கன்னடம் எதனை எல்லாம் சட்டம் போட்டு தடுக்கின்றதோ அதனை எல்லாம் இங்கு தமிழக அரசியல்வாதிகளே செய்துகொண்டிருக்கின்றார்கள்.
தமிழக திராவிட கட்சிகளுக்கு, ஒரு தேசிய கட்சி கன்னடத்தில் பாடம் நடத்திகொண்டிருக்கின்றது.
கன்னட காங்கிரஸ் பெரியாரை ஏற்றிருப்பதும், தமிழக திராவிட கட்சிகள் அவரை தூர எறிந்திருப்பதும் காலத்தின் விளையாட்டு.