பெங்களூர் புறப்பட்டார் சசிகலா

Image may contain: 14 people, people standing

சசிகலாவின் நகர்வுகளை உளவுதுறை மிக துல்லியமாக கண்காணித்து முதல்வருக்கு அனுப்பியது : செய்தி

வடகொரிய உளவுதுறை தென்கொரிய ராணுவ கம்பியூட்டர்களில் ஊடுருவியிருக்கின்றது, இஸ்ரேலிய உளவுதுறை ஈரானின் அணுசக்தி விஷயத்தில் புகுந்து கலங்கடித்துகொண்டிருக்கின்றது

இன்னும் எத்தனையோ உளவுதுறைகள் பெரும் அசாத்தியங்களை நிகழ்த்துகின்றன‌

தமிழக உளவுதுறை வடிவேல் காமெடி போல ஓவர் ஓவர் என சொல்லிகொண்டு சசிகலாவினை சுற்றி வந்திருக்கின்றது.

ராம ஜெயம் கொலை வழக்கு முதல் எத்தனையோ மர்மங்கள் தமிழகத்தில் உண்டு, அவை எல்லாம் உளவுதுறை ஒத்துழைப்பின்றி மர்மம் விலக்க முடியாது

ஏராளமான பணிகள் அப்படி தமிழகத்தில் இருக்கும்பொழுது தமிழக உளவுதுறை இப்படி கடமையாற்றுகின்றது.

இன்னும் என்னென்ன அவமானம் தமிழக உளவுதுறைக்கு வந்து சேருமோ தெரியாது

அடுத்து தினகரன் தினமும் எத்தனை கப் காபி குடிக்கின்றார், எந்த சோப் உபயோகிக்கின்றார் என்ற அளவில் உளவுதுறை ஆப்பரேஷன்கள் இருக்கலாம்

வாழ்க தமிழக‌ உளவுதுறை.


மருத்துவமனையில் தன் கணவனை சந்தித்துவிட்டு சென்றிருகின்றார் சசிகலா

மர்மம் சூழ்ந்த சசிகலா ஜெயா உறவில், சசிகலாவின் இந்த சந்திப்பு சசிகலாவின் உண்மை முகமா, அல்லது ஜெயா இல்லா நிலையின் சூழலா என தெரியவில்லை

நடந்த விஷயங்கள் அப்படி.

என்னதான் நடராஜன் ஜெயாவினை முதல்வராக்கினாலும், ஜெயாவிற்கு அவரை அடக்கி வைக்கவேண்டிய அவசியமும் இருந்தது. நடராஜனின் நடவடிக்கைகளும் அப்படி இருந்தன‌

நான் நிழல் முதல்வர் என்பார், என்னால் ஆட்சி கலைக்க முடியும் என்பார், என்னை மீறி என்ன நடக்கும்? என்பார், டெல்லியில் சென்று நானே அதிமுக என்பார்

மறுநாளே ஜெயா ஆட்சிக்கு என்னால் ஆபத்தில்லை என்பார்

ஜெயா அவரை பல இடங்களில் ஓட அடித்திருக்கின்றார், நடராஜன் மீது அவருக்கு பல இடங்களில் வெறுப்பு இருந்திருக்கின்றது

ஏராளமான நேரங்களில் நடராஜன் தலைமறைவாகியிருக்கின்றார், தூங்காமல் அலைந்திருக்கின்றார், தவித்திருக்கின்றார், பயந்திருக்கின்றார்.

உச்சமாக நடந்ததுதான் செரீனா கஞ்சா விவகாரம்.

ஆக இப்படிஎல்லாம் ஜெயா நடராஜனை போட்டு சாத்தும்பொழுது சசிகலா ஜெயலலிதாவோடேதான் இருந்தார். தன் சொந்தங்களை எல்லாம் ஜெயா விலக்கிவைத்தபொழுதும் சசிகலா அங்கேதான் இருந்தார்

ஜெயா நடராஜனை கைதுசெய்ய சொல்லி உத்தரவு போட்டாலும், என்னை தொடமுடியுமா? தொட்டால் என்ன நடக்கும் தெரியுமா என நடராஜனால் மிரட்டவும் முடிந்தது, காவலர்களே அய்யா, தயவு செய்து கைதாகுங்கள் என கண்ணீர் விட்ட காலமும் உண்டு.

கைது செய்யபட்டாலும் இரு நாளில் அசால்ட்டாக கைவீசி வெளிவரும் நடராஜனை தமிழகம் கண்டுகொண்டுதான் இருந்தது.

அதாவது அந்த அளவு சசிகலாவிற்கும் அவருக்கும் தொடர்பும் இருந்திருக்கின்றது, இவ்வளவிற்கும் சசிகலா ஜெயா அருகிலேதான் இருந்தார்.

அப்படி எத்தனையோ சந்தர்பங்களில் நடராஜனை சந்திக்காமல், ஏறெடுத்தும் பார்க்காமல் ஆனால் தற்காத்துகொண்டும் இருந்த சசிகலாதான், இப்பொழுது அவரை ஓடிவந்து பார்த்து அழுதிருக்கின்றார்.

முன்பு ஏன் வரவில்லை, இப்பொழுது ஏன் ஓடிவந்தார் என்பதெல்லாம் வழக்கம் போல மர்மமே.

முன்பு வராமல் இப்பொழுது வந்த சசிகலாவினை அந்த நடராஜனின் கிட்னியோ கல்லீரலோ கணையமோ மன்னிக்கவே செய்யாது.

(அண்ணே…நடராஜனை சசிகலா சந்தித்துவிட்டார், செரீனா வந்தாரா? என ஒருவன் இன்பாக்ஸில் கேட்டுகொண்டே இருக்க்கின்றான்

டேய் யார பாத்துடா என்ன கேள்வி கேட்ட.. இவ்வளவு பேர் இருக்கும்பொழுது ஏண்டா என்ன பார்த்து மட்டும் கேட்ட, உன்ன விடமாட்டேன்டா)


ஏதோ அவர் சார்க் உச்சமாநாட்டிற்கு செல்பவர் போலவும், ஜி7 நாடுகள் கூட்டத்திற்கு செல்வது போலவும், வடகொரிய அதிபருடன் பதற்றமான பேச்சுவார்த்தைக்கு செல்வது போலவும் தமிழக மீடியாக்களில் செய்திகள் இப்படி வருகின்றன‌

“பெங்களூர் புறப்பட்டார் சசிகலா”

எதற்கு போகின்றார் என்பதுபற்றிமட்டும் சொல்லவே இல்லை? காவேரி மீட்கவா?

ஒரு பரோல் கைதி , மறுபடியும் சிறைக்கு செல்கின்றார் என சொல்லகூடவா இங்கு ஊடகங்களுக்கு தைரியமில்லை?

பூரா பயலும் ஜெயாடிவி போலவே செய்தி சொல்லி கொண்டிருக்கின்றான்