பெட்ரோல் விலை உயர்வு ஏன்?
பெட்ரோல் விலை உயர்விற்கு கன்னட தேர்தலுக்காக மோடி அரசு காத்திருந்தது என சொல்லமுடியாது. பெட்ரோல் விலை உயர்விற்கு உலக காரணங்களும் இருக்கின்றன
கிட்டதட்ட தமிழகத்து வைகோ சாயலுள்ள டிரம்பின் அழிச்சாட்டியம் எல்லை மீறுகின்றது, ஜெருசலேமில் அமைய இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு தெரிவிக்க டிரம்ப் அதிரடி ஒன்றை செய்துவிட்டார்
சீனா போலவே ஐரோப்பிய பொருளுக்கும் வரியினை உயர்த்திவிட்டார், இது ஐரோப்பிய ஜாம்பவனான ஜெர்மனிக்கு கடும் ஆத்திரத்தை கிளப்பிவிட்டது
போதாகுறைக்கு செக் குடியரசு, ஹங்கேரி போன்றவையும் அமெரிக்காவிற்கு ஆமாம் போட அங்கும் கச்சை கட்டுகின்றார்கள்
இந்நிலையில் ஈரான் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி இன்னும் பதற்றத்தை கூட்டுகின்றார் டிரம்ப்
ஜெர்மன் இதில் தனித்து நிற்கின்றது, மோர்கல் புட்டீனுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது காரணம் ஈரானின் ஒப்பந்த நாடுகளில் ஜெர்மனும் உண்டு
அமெரிக்கா விலகும் பட்சத்தில் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கபடும், அப்பொழுது ஈரானின் எண்ணெய் வியாபாரம் தடைபடும்
இதனால் ஒருவித பதற்றத்தால் உலகம் முழுக்க எண்ணெய் விலை உயர்கின்றது, அது இந்தியாவிலும் எதிரொலிக்கின்றது
மன்மோகன்சிங் போல திறமையாக சமாளிக்க இவர்களுக்கு தெரியாது, ஜிஎஸ்டி 1 லட்சம் கோடி வசூல் என சொல்லும் கூட்டத்திற்கு அதற்கு முந்தைய எஸ்.எஸ்.டி எத்தனை கோடி வசூலித்தது என சொல்ல தெரியவில்லை
நிதி அமைச்சர் ஜெட்லி வேறு மருத்துவமனையில் இருகின்றார்
இதனால் உலகவிலைக்கு தக்க இந்தியாவிலும் எண்ணெய்விலையினை உயர்த்திவிட்டு அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள்
உண்மையில் எண்ணெய் விலையினை கட்டுபடுத்தும் வித்தை இவர்களுக்கு தெரியவில்லை, ஏதும் சொன்னால் ராகுல் காந்தி பிரதமராக முடியாது , சிதம்பரத்திற்கு உலகெல்லாம் சொத்து உண்டு என சம்பந்தமில்லாமல் குதிப்பார்கள்
வெள்ளையனுக்கு முன்பே கிழக்காசியா முழுக்க வட்டிகடை நடத்திய குடும்பத்திற்கு அப்படி சொத்து இல்லை என்றால்தான் ஆச்சரியம், இருப்பதில் என்ன ஆச்சரியம்? என கேட்டால் நேரு குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் என்பார்கள்
ஒன்றை கேட்டால் ஒன்றை சொல்வார்கள், அதன் பெயர் நாட்டுபற்று என அர்த்தமும் வைத்திருப்பார்கள்