பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து … கிரண்பேடி

பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து மிகப்பெரிய இயக்கம் உருவாக வேண்டும் : கிரண்பேடி

பொதுவாக அப்படி ஒரு இயக்கம் உருவாகாது, காரணம் பெண்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை வராது, ஜெயா சசிகலா போல எல்லா பெண்களும் இணைந்திருக்கமாட்டார்கள்

ஆனால் ஒருவர் நினைத்தால் தான் அப்படி எல்லோரையும் இணைத்து ஒரு இயக்கம் உருவாக்க முடியும்

அவர்தான் சிம்பு

அவர் ஏதாவது செய்தால் மட்டுமே இந்த மாதர்சங்கங்கள் எல்லாம் கொடிபிடித்து ஒன்றாய் கூடி கோஷமிடுவார்கள், மற்ற யார் என்ன செய்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள்

சிம்புவினை திட்டவேண்டுமென்றால் மட்டுமே இந்த மாதர்கள், மதர்கள் என எல்லா தாய்குலங்களும் ஒன்றாய் கூடுவார்கள்..

ஆக அவரை மட்டும் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் சில நாட்களிலே பெரும் மகளிர் இயக்கம் ஒன்று உருவாக போவது உறுதி

தமிழக பெண்களை ஒற்றுமையாக திரட்டும் பெரும் ஆற்றல் சிம்புவினை தவிர யாருக்குமில்லை..