பெண் கல்வியினை அதுதான் தொடங்கிவைத்தது என சிலர் பேச தொடங்கியிருக்கின்றன

திராவிடம் தமிழகத்தை வளர்த்தது சென்னையின் வளர்ச்சிக்கெல்லாம் அதுதான் உழைத்தது, பெண் கல்வியினை அதுதான் தொடங்கிவைத்தது என சிலர் பேச தொடங்கியிருக்கின்றான்.

அன்றிலிருந்தே தமிழகம் உலகிற்கு விருப்பமான இடம், சாலமோன் அரசனின் கப்பல்கள் இங்கு வந்திருக்கின்றன. ரோமர்கள் முத்து தேடி வந்திருக்கின்றனர்,சீன பட்டுக்கு நிகராக காஞ்சி பட்டும் இருந்திருக்கின்றது

மாலிக்காபூர் முதல் எத்தனையோ பேர் தமிழக செல்வங்களை தேடி வந்திருக்கின்றனர், நாயக்கர்கள் தமிழகத்தில் சம்மணம் போட்டு அமர்ந்தே விட்டனர்.

நவீன தமிழகம் வெள்ளையன் காலத்திலே தொடங்கிற்று

1600களில் இந்தியா வந்த பிரிட்டிசாரே நவீன வளர்ச்சிக்கு வழிகோலினர். அதற்கு முன் வந்த போர்த்துகீசியர் உல்லாச பேர்வழிகள், பிரெஞ்ச்காரர்கள் அவர்களுக்கு அடுத்த உல்லாச விரும்பிகள்

அதனால்தான் இன்றளவும் போர்ச்சுகீசிய கோவாவும், பிரெஞ்சுக்காரர்களின் பாண்டிச்சேரியும் “தனித்த” அடையாளத்தோடு நிற்கின்றன, உலகெல்லாம் அவர்கள் காலணிகள் இன்றும் அப்படித்தான்

ஆனால் பிரிட்டிசார் சிறந்த நிர்வாகிகள். பம்பாய், சென்னை, கல்கத்தா என மிகசிறந்த துறைமுகங்களை அடையாளம் கண்டு அவற்றை மிக நன்றாக வளர்த்தனர்

சென்னையின் வளர்ச்சி 1700களிலே தொடங்கிற்று, சென்னை கோட்டை முதல், துறைமுகம் , மவுண்ட் ரோடு ரயில், நிலையம் இன்னும் ஏராளமான விஷயங்களை அவனே செய்தான்

அதாவது அடுத்த 200 ஆண்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அவன் உருவாக்கிவிட்டே சென்றிருந்தான்.

1950களிலே சென்னை பெருவளர்ச்சி பெற்றிருந்தது, அந்நேரம் பெங்களூர், திருவனந்தபுரம், ஐதரபாத், விசாகபட்டினம் எல்லாம் கொஞ்சமும் வளர்ச்சியற்ற பகுதிகள்

வளர்ச்சியடைந்த மாநிலமாகவே தமிழகத்தை அவன் விட்டு சென்றான், வடக்கே நிலை மிக பரிதாபம்

பின்னர் வந்த காங்கிரஸ் அரசில் 1967 வரை அணைகளும் , ஆலைகளும் பெருகின, மிக முக்கியமான ஆலைகள் எல்லாம் , அணைகள் எல்லாம் காமராஜர் காலத்தில் வந்தவை

ஆக அன்றே தமிழகமும் சென்னையும் முன்னிலையில்தான் இருந்தது, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதெல்லாம் வெற்று கோஷங்கள்

இந்த சென்னையில்தான் 1967ல் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தன‌

அன்று ஐதரபாத், பெங்களூர், திருவனந்தபுரம் என எந்த தென்னக அடையாளம் இல்லாத காலங்களிலே, சென்னைக்கு பெரும் அடையாளம் இருந்தது

அவைகள் எல்லாம் நோஞ்சான் குழந்தைகள் என்றால், சென்னை அப்பொழுதே முரட்டு வாலிபன் போன்று இருந்தது

பின் அவைகள் எல்லாம் மிக வேகமாக வளர்ந்து இன்று சென்னையினை நெருங்கிவிட்டன, சில மிஞ்சிவிட்டன. ஆனால் சென்னை அப்படியேதான் இருக்கின்றது

அதாவது சென்னை அன்றே ஒலிம்பிக் சாம்பியனாக ஓடிகொண்டிருந்தது, அதன் பின் நடக்க தொடங்கிய மற்ற மாநில நகரங்கள் எல்லாம் இன்று சென்னைக்கு சமமாக ஓடுகின்றன‌

2 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்த நிலையில் பின்னர் வந்த பேட்ஸ்மேன் அடித்து ஆடினால் அது ஆட்டம், ஸ்கோரை 200க்கு கொண்டுவந்தால் அது ஆட்டம், மற்ற மாநில ஸ்கோர் அப்படி உயர்ந்தது

பெங்களூர், விசாக் எல்லாம் அப்படி அசுர வேகத்தில் வளர்ந்தன. அமராவதி எனும் நகரத்தை சீனாவின் குவாங்சூ போல திட்டமிட்டு உருவாக்குகின்றது ஆந்திரா

கேரளமும் , கன்னடமும், ஆந்திராவும் கிழிக்காத எந்த கிழிப்பினை தமிழகம் கிழித்துவிட்டது? அங்கெல்லாம் திராவிட கட்சிகளா ஆள்கின்றது?

200 ரன்களை ஒருவன் எடுத்து, நல்ல அடித்தளம் விட்டு சென்றிருக்கும் பொழுது, அடுத்து வருபவன் 20 ஓவருக்கு 10 ரன் எடுத்து 210 என நின்றால் எப்படி?

திராவிட கட்சிகளின் தமிழகம் வளர்ச்சி இப்படியானது

எது வளர்ச்சி? அவைகள் வளர்ந்ததா? தமிழகம் வளர்ந்ததா?

அவைகள் பெரும் வளர்ச்சி காட்டியிருக்கின்றன, அவற்றிற்கு ஈடாக 3 மடங்கு வேகம் காட்டியிருக்கவேண்டிய சென்னை 10% கூட காட்டவில்லை

எப்படி?

இடிந்துவிழும் விமான நிலையம் முதல் கூவம் வரை சொல்லிகொண்டே செல்லலாம்

50 ஆண்டுகளாக சென்னையினை ஆண்டது யார்? அதேதான் “திராவிடம் “, ஐதரபாத், பெங்களூரை , விசாக்கினை வளர்த்தது யார்? சத்தியமாக திராவிடம் அல்ல‌

திராவிடம் என்ன செய்தது? வெள்ளையன் சாலைக்கு அண்ணா நாமமிட்டது, அவன் கட்டிய பல்கலை கழகத்திற்கு அண்ணா நாமமிட்டது (உண்மையில் அதற்கு கணிதமேதை ராமானுஜம் பெயர்தான் வைக்கபட்டிருக்கவேண்டும்) இப்படி தமிழகத்திற்கு அண்ணா நாமம் சூட்டியதை தவிர அது ஒன்றும் செய்யவில்லை

கட்டியதெல்லாம் அவன், நாமம் சூட்டியது இவர்கள்

ஆக சென்னையின் வளர்ச்சிவேகத்தை திராவிடம் குறைத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்

சரி ஆந்திரர்கள் சென்னை எங்களுக்கு என்றபொழுது திராவிடம் என்ன சொன்னது? எங்கிருந்தால் என்ன, திராவிட நாட்டில் இருக்கின்றது என அமைதியானது

ம.பொ.சியின் போராட்டத்தாலே சென்னை மீண்டது

ஆனால் இன்று முளைத்த திராவிட குஞ்சுகளிடம் கேளுங்கள், சென்னை கோட்டை, ரிப்பன் மாளிகை எல்லாமே திராவிட அரசு கட்டியது என்பார்கள், சிரிக்காமல் சீரியசாக சொல்வார்கள்

பெண் கல்வி நிலை என்ன?

200 ஆண்டுகளுக்கு முன்பே நெல்லையில் பெண் கல்வி தொடங்கிற்று, திராவிட இயக்கம் தோன்றுமுன்னே டாக்டர் முத்துலட்சுமி போன்ற பெண் மருத்துவர்கள் இருந்தார்கள், 1930 க்கு முன்னமே பெண் கல்வி தொடங்கிற்று

ஆக இந்த விவரமறியா திராவிட குஞ்சுகள் அள்ளிவிடும் கதை கொஞ்சமல்ல‌

விரைவில் கல்லணை முதல், தஞ்சை கோயில் முதல் சென்னை கோட்டை, ரயில் நிலையம் என எல்லாம் திராவிட அரசு கட்டியது என சொல்வார்கள், நிச்சயம் சொல்வார்கள்

எனக்குட் தெரிந்து திராவிட என்றால் அதனை சொல்லலாம்

அதாவது 50 வருடத்திற்கு முன்பு தமிழகத்தில் மது என்பது அருவெருப்பானது, குடித்தாலும் ஒளிந்து மறைந்து குடிப்பார்கள். ஒன்று பெரும் வரி கட்டி குடிக்கவேண்டும் அல்லது மறக்கவேண்டும்

சமானியர்களுக்கு அது எட்டா விஷயமாயிருந்தது

இந்த 50 வருடத்தில் தமிழகத்தில் எங்கும், எப்பொழுதும், யாரும், எந்நேரமும் குடித்துகொண்டே இருக்கலாம் எனும் அளவிற்கு நிலை மாறியிருக்கின்றது,

அன்று தமிழகத்தில் மது ஆலைகள் இல்லை, இப்படி 6 ஆயிரம் மதுகடைகள் இல்லை

கோவில் வேண்டாம் என்ற திராவிட கட்சிகள் மதுகடை வேண்டாம் என சொன்னதா? இன்று தமிழக கோவிலகளை விட மதுக்கடை அதிகம். மறுக்க முடியுமா? அதுவும் அரசே நடத்தும் மதுக்கடை

இதுதான் “திராவிடத்தின்” மகத்தான சாதனை, அடுத்து சினிமாவினை கலந்து அரசியலை கெடுத்தது

இன்று ரஜினிகாக பொங்கும் திராவிடர்கள், அதே சினிமாக்காரன் ராமசந்திரன் முகம்காட்டி அண்ணா வோட்டு கேட்டதை மறக்கின்றார்கள்.

அவ்வளவு செய்த வெள்ளையனோ, ஓரளவேனும் தாங்கிநின்ற காமராஜர் வரையிலான அரசுகளுக்கும் அந்த விளம்பரம் இல்லை

ஆக திராவிட என்பது சமூக இயக்கம், அது ஆட்சிக்கு வந்து என்ன செய்தது? என எழுதுங்கள். சில இருக்கலாம் ஆனால் அந்த சிறிய திட்டங்களுக்கு இவர்கள் கொடுக்கும் விளம்பரம் மகா கொடுமையானது

ஆனாலும் சமூக திட்டங்களுக்கு திமுக முன்னுரிமை கொடுத்திருக்கின்றது, அதனை எழுதுங்கள் , சில தமிழ் அடையாளங்களை கொடுத்தது அதனை எழுதுங்கள்

மாறாக கல்லணை கட்டியது திமுக, சென்னையினை வளர்த்தது திமுக, ரயில் விட்டது திமுக, பெண் கல்வி தொடங்கியது திமுக என அள்ள்விட்டுகொண்டிருந்தால் பார்ப்போர் சிரித்துவிடுவர்

பெண்களுக்கான கல்வி 150 ஆண்டுகளுக்கு முன்பே நெல்லை பக்கம் தொடங்கபட்டு அந்த கல்வி நிலையங்கள் இன்றும் நடக்கின்றன‌

எத்திராஜ் கல்லூரி, இன்னும் சில மகளிர் கல்லூரிகள் எல்லாம் தொடங்கபட்டது எப்பொழுது?

பெண்களுக்கான பிரசவ மருத்துவமனை ஐடா ஸ்கேடர் எனும் பெண்மணியால் திராவிடத்திற்கு 70 வருடத்திற்கு முன்பே என்றோ தொடங்கபட்டாயிற்று

கூவம் போல் திராவிட அரசியலுக்கும் சில அடையாளம் உண்டு, அதனை கிளற வேண்டாம். தாங்காது.

தமிழுக்கு திராவிடம் என்ன செய்தது? திருகுறள் மட்டும்தான் இலக்க்கியமா? அதுவும் இவர்கள் எழுதியதா?

கம்பராமாயணம் இந்த ஆட்சியில் எந்த இடம் சென்றது, ஆழ்வாரின் அற்புத பாடல்கள் என்னானது? பாரதியார், உ.வே சாமிநாதய்யரின் தமிழ்தொண்டு என்ன ஆனது

மதம், சாதி என தமிழையும் பாகுபாடு காட்டிய இன்னொரு முகம் திராவிட ஆட்சியில் உண்டு, மறுக்கமுடியுமா?, சீனிவாச ராமானுஜம் எனும் பெரும் விஞ்ஞானிக்கு இந்த அரசு செய்த அங்கீகாரம் என்ன?

பிரமாணன், மதம் என இவர்கள் தமிழர்களை ஒதுக்கியது கொஞ்சமல்ல, பண்டைய மன்னர்களின் ஆலயங்கள் என்ன? அவற்றின் அற்புத சிலைகள் என்ன? இந்த சிலைகளுக்காவது ஒரு கணக்கு உண்டு?

ஏதாவது ஒரு கோயில் இவர்கள் ஆட்சியில் சீரமைக்கபட்டிருக்கும், மதத்தை தாண்டி அவை தமிழர் அடையாளம் அல்லவா?, ஆனானபட்ட திருகுறளே மதுரை கோயில் குளத்தில்தானே குளித்தது

மத அடையாளம் என்பதற்காக் பண்டைய தமிழ் ஆலயங்களை இவர்கள் சீரழியவிட்டதை ஒரு காலமும் ஏற்கமுடியாது, அதுவும் தமிழனாக சுத்தமாக ஏற்கமுடியாது.

இப்படி ஏகபட்ட குறைகள் திராவிடம் 50ல் உண்டு, ஏன்? காவேரி நீரும், தற்போது மணலும் போனது யார் ஆட்சியில்?

பேச வைக்காதீர்கள், அது உங்களுக்கு நல்லது அல்ல.

பிரிட்டிஷாரின் ஸ்மார்ட் சென்னையினை, போர்ச்சுகீசியரின் கோவா போல ஆக்கிவிட்டதை தவிர திராவிட சாதனை என்ன சொல்லிவிடமுடியும்?

விட்டால் தமிழகம் தோன்றியதே திராவிட ஆட்சியில்தான் என்ற அளவிற்கு எழுதுவார்கள் போலிருக்கின்றது.