பெரம்பலூரில் ஒரு மந்திரவாதி கைது…
https://youtu.be/G1PcnI9V0XA
பெரம்பலூரில் ஒரு மந்திரவாதியினை போலிசார் கைது செய்திருக்கின்றனர்
மனிதர் ஏராளமான மண்டையோடுகள், மை, தகடு இன்னபிற பொருட்களுடன் ஒரு இளம்பெண்ணின் சடலத்தையும் வைத்திருந்தாராம், அதாவது குடியிருப்பு நடுவே சுடுகாடு அமைத்திருக்கின்றான்
அவரை கைது செய்யும்பொழுது அவன் சொன்னதுதான் பேரதிர்ச்சி
“என்னை விடுங்கள், இது சசிகலா வெளிவருதற்கான உச்சகட்ட பூஜை. ஒருவாரம் செய்யவேண்டும், நான் வாக்குறுதி கொடுத்துவிட்டேன்
இது சின்னமாவிற்கான பூஜை, உங்களை விடமாட்டோம்” என ஆடியிருக்கின்றார்
கொஞ்சம் அரசியல் தெரிந்த மந்திரவாதி போலிருக்கின்றது, தப்பிக்க வழிதேடியிருக்கின்றான், பிடித்து அடைத்துவிட்டார்கள்
சசிகலா ஜோதிட, மந்திரங்களில் நம்பிக்கை உள்ளவர் என்ற செய்தியினை எப்படி எல்லாம் தனக்காக வளைத்திருக்கின்றான்.
அது மட்டுமல்ல அவனிடம் 2 ஆயிரம் ஆவி உள்ளதாம், ஏவி விட்டால் தமிழகம் தாங்காதாம், ஆனால் இதனால் தினகரனுக்கு 2 ஆயிரம் வோட்டு உறுதி என்றெல்லாம் அவன் சொல்லவில்லை..
இவனையும் பார்பன அக்ரஹார சிறையில் அடைக்கவேண்டும், மீதியினை சசிகலா பார்த்துகொள்வார், அவர் ஜெயா சமாதியில் அடித்த அடி எல்லோருக்கும் தெரியும்
இந்த மந்திரவாதி சசிகலாவிற்கான பூஜை என எதனையோ சொல்ல, உண்மையான அகோரி பூஜைக்கு ஆர்.கே நகர் மக்கள் தயாராகிகொண்டிருக்கின்றார்கள்..