பெரியாரின் குரல் …..
“சிலை வெறும் கல், அதை வணங்குபவன் காட்டுமிராண்டி பயல்னு நான் தான் சொன்னேனுங்க. அதுக்காக இந்த பயலுக எல்லாம் உன் சிலை கல்லுதானே உடைப்போம்னு வந்துட்டானுக
இவனுக இந்த அளவு சிந்திச்சி அறிவோட வந்தது சந்தோஷமுங்க
ஆனா இதே பகுத்தறிவோட கோவில்ல இருக்க சிலை எல்லாம் உடைச்சிட்டு இங்க வந்து என் சிலைய இடிங்கடான்னா ஓடிரானுக
என் சிலைய இடிக்க பொங்கி வழியிற பகுத்தறிவு அவனுக சாமி சிலைய உடைகிறது இல்லீங்க, இதெல்லாம் கலவரம் நடக்கணும்னு செய்ற வேலைங்க
சாமி சிலை எல்லாம் உடைச்சிட்டு இங்க வரட்டுமுங்க, என் சிலைய நானே இடிக்கின்றேனுங்க
இந்த மக்களுக்கு அறிவும் சிந்தனையும் அப்படியாவது வந்தா போதுமுங்க. எல்லோரும் முழிச்சிகிட்டா, அறியாமையில இருந்து வெளிவந்துட்டா எனக்கு என்னங்க வேலை? அதுக்கப்புறம் என் சிலை எதுக்குங்க?
மானமும் அறிவும் சுயசிந்தனையும் இந்த மக்களுக்கு வரும் வரைக்கும் சிலையா இருந்தாலும் ஈரோட்டு ராமசாமி பகுத்தறிவு பேசிகிட்டேதான் இருக்கானுங்க, அவன் இன்னமும் பேசுவானுங்க, ஒரு பயலும் தடுக்க முடியாதுங்க”