பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் இக்காலத்திற்கு ஏற்றவை அல்ல : “டாக்” டர் கிருஷ்ணசாமி.

பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் இக்காலத்திற்கு ஏற்றவை அல்ல : “டாக்” டர் கிருஷ்ணசாமி.

சமஸ்கிருதமும், மாட்டு மூத்திரமும், காவியும் மட்டும் இக்காலத்திற்கு பொருந்த கூடியதா?

சாதிக்காக கவுரவ கொலைகளும், இன்னபிற அழிச்சாட்டியங்களும் இக்காலத்தில் நடக்கவில்லையா?

மதங்களின் பெயரால் மானிடர்கள் சிதைக்கபடுவது என்ன நின்றுவிட்டதா?

இக்காலத்திற்கு பெரியாரும், அம்பேத்கரும் தேவையில்லை என்றால், கமலஹாசனின் சண்டியர் எனும் பெயரும் இதிகாச பெயர் அதனால் இப்பொழுது சிக்கல் இல்லை என சொல்ல தயாரா?

நீங்கள் போராடிய, கண்டதேவி தேர் தடையின்றி ஓடுமளவு இங்கு சமத்துவம் வந்துவிட்டதா மிஸ்டர் கிருஷ்ணசாமி? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்

ஒரு தேரினை தாழ்த்தபட்ட மக்கள் தொட்டு இழுக்க நீங்கள் பாடுபட்ட சமூகநிலை இன்னும் இருக்கும்பொழுது, அம்பேத்கரும் பெரியாரும் இனி தேவையில்லை என எப்படி உங்களால் சொல்லமுடிகின்றது மிஸ்டர் கி.சாமி?

கண்டதேவிக்காக நீங்கள் போராடியது நடிப்பா? அல்லது நாங்கள் எல்லாம் பைத்தியக்காரர்களா?

வருணாசிரம தர்மங்களும், அவற்றின் அழிச்சாட்டியமும் கொள்ளை நோய்களாக‌ சமூகத்தை தாக்கும்பொழுது பெரியார், அம்பேத்கர் போன்ற சமூக மருத்துவர்கள் தேவைபட்டுகொண்டே இருப்பார்கள், “டாக்”டர் கிருஷ்ணசாமி…
நீங்கள் ஏன் உங்கள் “புதிய தமிழகம்” கட்சியினை “புதிய இந்தியா” பிஜேபி கட்சியுடன் இன்னும் இணைக்கவில்லை கி.சாமி?



நீட் தேர்வு கல்விப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது: தமிழிசை

ஆக அடுத்த “புரட்சி தலைவர்” மோடியா மேடம்