பெரியார் என்னதான் செய்தார்….

நீ தாழ்த்தபட்டவன் , உன்னை ஆலயத்தினுள் அனுமதித்தால் ஆலயம் தீட்டாகும், கோவில் நிழலில் கூட உன் கால் படகூடாது என விரட்டபட்ட காலத்தில்தான் பெரியார் போரட வந்தார்

கடவுளின் பெயரால் மனிதனை அனுமதிக்கா ஆலயத்தின் உள்ளிருப்பது கடவுளாக இருக்கமுடியுமா? என கேட்டார்

இந்த எளிய பாமர மக்கள் நுழையா ஆலயம் எதற்கு? கோவில் எதற்கு? என்ற ஆத்திரத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலே அது சாமி அல்ல, கல் என்றார்

சில சிலை உடைப்பு போராட்டம் என மண்ணினால் செய்யபட்ட உருவங்களை உடைத்தாரே அன்றி, ஆலயத்தில் புகுந்து வழிபடு சிலையினையோ அல்லது கருவரையில் இருந்து கொண்டு மறியலோ அவர் செய்யவில்லை

வழிபாடு நடைபெறும் எந்த இடத்திலும் அவர் வன்முறை செய்யவில்லை, மாறாக எளியமக்களின் நடுவில் இருந்து கொடுமைகளை எடுத்து சொல்லி எதிர்ப்பினை தெரிவித்தார்

அந்த சம்பவத்தைத்தான் ஏதோ பெரியார் கோவிலில் புகுந்து கற்பக சிலைகளை எடுத்து கோபுரத்தின் மீதிருந்து வீசியதை போல பலர் பெரியார் சிலைகளை உடைத்தார் என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

எந்த ஆலயத்தின் சிலை அவரால் உடைக்கபட்டது என கேளுங்கள், ஒருவனிடமும் பதில் இருக்காது