பெரியார் கண்ட புதுமைபெண்ணாக கஸ்தூரி ….
நடிகை கஸ்தூரி மிக கீழ்தரமான விமர்சனங்களை எல்லாம் எதிர்கொள்கின்றார், கருத்துசொல்லும் பொழுது எம்மாதிரி வசவுகளை எல்லாம் சொல்லகூடாதோ அப்படி எல்லாம் அவரை நோக்கி நா கூசும் வார்த்தைகள் பிரயோகிக்கபடுகின்றன
அவரின் தனிபட்ட வாழ்வு யாருக்கும் தேவையில்லை, ஆனால அதற்காக அறவே சம்பதமில்லா விஷயங்களை சொல்வது சுத்த அபத்தம்
முன்னாள் விடுதலைபுலி கருணாவினை அவருடன் தொடர்பு படுத்தி பேசுவது பற்றி அவரே கொதிக்கின்றார், இது நிச்சயம் சாத்தியமில்லாத ஒன்று
புலிகளிடமிருந்து தன் உயிரை காக்க ஓடவேண்டிய நிலையில் இருந்த இருக்கும் கருணா மீது இப்படி எல்லாம் குற்றத்தை சொல்வது பெரும் உளறல்
கஸ்தூரியினை எப்படி எல்லாம் கீழ்தரமாக திட்டுகின்றார்கள் என அவர் சொல்லும்பொழுது மனம் வலிக்கத்தான் செய்கின்றது
ஒரு பெண்ணை இப்படி எல்லாம் சொல்லிவிட்டு என்ன பெரியார் கொள்கைகளோ, என்ன மண்ணாங்கட்டியோ. பெரியார் பெண்களை மதிக்கதான் சொன்னார், இப்படிபட்ட பெண்ணை கொச்சைபடுத்தும் காரியங்கள் அவருக்கே பிடிக்காதது
பிராமண பெண் என்பதால் அவரை இஷ்டத்திற்கு எழுதுவது சரியல்ல, பிராமணியம் வேறு பிராமண வெறுப்பு வேறு, இரண்டாவது பெரும் ஆபத்தானது
கருணாஸுடன் கஸ்தூரி எனும் புரளியினை எவனோ திராவிட சிகாமணி கிளப்பிவிட, கருணாஸ் என்றால் யாரன தெரியாதவன் விடுதலைபுலி கருணாவினை இணைத்து எழுதிவிட்டான்
கருணாசுக்கும், கருணாவிற்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதியவனை என்ன சொல்ல? இப்படிபட்ட அறிவாளிகள் தான் முகநூலில் திராவிடம் காக்கின்றார்கள்
கருணாவுடன் கஸ்தூரிக்கு தொடர்பு என எழுதியவனி முகநூல் ஐடி என்ன தெரியுமா? “முத்தமிழ் அறிஞர் கருணாநிதி”
பெண்களை மதித்து அவர்களுக்கு சம உரிமை கொடுக்க சொன்ன திராவிட பூமியில், பெரியார் பூமியில் இப்படி எல்லாம் ஒரு பெண்ணை கொச்சைபடுத்துவது எப்படி சரியாகும்??
கஸ்தூரி தன் கருத்தை சொன்னால், பதில் கருத்தை சொல்லலாம் அதனை விட்டு தூஷணம் பேசுவது சரியானது அல்ல
கருணா யாரை வைத்திருந்தார் என்பது பிரச்சினையல்ல, ராஜிவ் கொலையில் மிக முக்கியமான கே.பத்மநாதனை யார் வைத்திருக்கின்றார்கள் என்பதுதான் பிரச்சினை
இன்னும் அவர் இலங்கை அரசின் விருந்தாளி, இதனை பற்றி எல்லாம் எவனும் பேசமாட்டான்.
ஒன்று புரிகின்றது, ஒரு பிராமண பெண்ணை திட்டி திட்டி அவரை பெரியார் கண்ட புதுமைபெண்ணாக உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள், கஸ்தூரியின் ஆக்ரோஷம் அப்படித்தான் இருக்கின்றது
அவரும் அசந்ததாக தெரியவில்லை, மிக அசால்ட்டாக தன் பதிலையும், கருத்தையும் எடுத்து வைக்கின்றார், நல்ல தைரியம் இருக்கின்றது
காலம் எப்படி எல்லாம் மாறிவிட்டது
ஒரு காலத்தில் பிராமணர்கள் பேசியதை எல்லாம் இன்று திராவிடம் பேசுபவர்கள் பேசுகின்றார்கள் , முன்பு திராவிடர் பேசிய பேச்சுக்களை இன்று பிராமணர் பேசுகின்றார்கள்
கஸ்தூரி என்ற பிராமண பெண், பெரியார் கனவு கண்ட திராவிட புதுமை பெண்ணாக உருவாகி கொண்டிருக்கின்றார் என்பதுதான் விசித்திரம்