பெரியார் சாதியினை எதிர்த்து போராடினார் என்பதே சரி
பெரியார் இந்துமதத்தை எதிர்த்து போராடினார் என்பதை விட சாதியினை எதிர்த்து போராடினார் என்பதே சரி
பெரியார் காலத்தில் உலகமெல்லாம் நாத்திகவாதம் இருந்தது, அது ஐரோப்பாவில் பாதியினை ஆண்டது, சீனாவில் எழும்பியது, வியட்நாமில், கொரியாவில், கியூபாவில் எல்லாம் பரவியது
அப்படி உலகளாவிய பாதுகாப்பு இருந்தது, இந்தியாவின் பிரிட்டன் அரசும் இங்கு சில அரசிலுக்காக அதை அனுமதித்தது
பின்னாளில் நேரு நாத்திகராக இருந்தாலும் இந்தியா அவரை கொண்டாடியது. நேரு நாத்திகராக இருந்தாலும் பக்தி மார்க்கத்திற்கு எதிரானவர் அல்ல
பெரியார் காலத்தில் மேலிடத்தில் அவருக்கு ஆதரவு இருந்தது, அதனால் கடவுள் அவமதிப்பு என சில போராட்டங்களை அவர் நடத்தி இருக்கலாம்
ஆனால் இப்பொழுதுள்ள காலம் வேறு , காலத்தை கணித்து போராட வரவேண்டுமே தவிர, காலம் தவறி வம்பிழுத்தால் மண்டையில் அடிவாங்க போவது உறுதி.
உலகெல்லாம் நாத்திகவாதம் விடைபெற்றாயிற்று, இந்தியாவின் எல்லா மத ஸ்தலங்களும் நிரம்பி வழிகின்றன
ஆன்மீக விஷயங்களை தேடி தேடி மக்கள் ஓடுகின்றார்கள், தங்களுக்கு மேலொரு சக்தி உண்டென்று நம்புகின்றார்கள்
ராமர் படத்தை செருப்பால் அடிப்பதெல்லாம் மிக கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும், மாறிவிட்ட காலத்தில் இவை எல்லாம் செய்ய கூடாதவை
மாநில சுயாட்சி, தமிழ் வளர்ச்சி போன்ற விஷயங்கள் வரவேற்கபடுமே தவிர இம்மாதிரி விஷயங்கள் பெரும் குழப்பமே கொடுக்கும்
ராமாயணம் நடந்ததா? மகா பாரதம் நடந்ததா என்பதற்கு முன்னால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படி கற்பனையாக எழுத ஒருவனால் முடியுமா என்பதை இவர்கள் சிந்திப்பதில்லை
பெண்ணுக்கு ஆசைபட்டால் யாராயிருந்தாலும் அழிவார்கள் என்றும், மண்ணுக்கு ஆசைபட்டால் யாராயிருந்தாலும் ஒழிவார்கள் என்ற மாபெரும் உன்னத தத்துவத்தை உணர்த்தும் இதிகாசங்கள் அவை
மானிட சமூகம் முன்பொருமுறை பெரும் அறிவோடு திகழ்ந்திருக்கின்றது பின்னால் அது மறைந்து காட்டுமிராண்டி ஆகிவிட்டது
இப்பொழுது அழிவோடு கூடிய அறிவினை மானிடம் பெற்றிருக்கின்றது
ஆனால் இன்றிருப்பதை விட, சுற்றுபுறத்திற்கு கொஞ்சமும் கேடு விளைவிக்கா மாபெரும் அறிவியலும் முன்னேற்றமும் அக்காலமே இருந்திருக்கின்றது
கடவுள்கள் எல்லாம் மானிடரோடு உறவாடியிருக்கின்றார்கள் என்பதற்கு பைபிளும் குரானுமே சாட்சி
பைபிளுக்கும் குரானுக்கும் தோராவிற்கும் பல்லாண்டு முன்பு நடந்த விஷயங்கள் ராமாயணமும் மகாபாரதமும்
அவை இந்நாட்டின் மாபெரும் அடையாளம்
செங்கடல் பிளந்தது என்பதை நம்புபவர்கள் ராமாயணமும் மகா பாரதமும் பொய் என்பதுதான் வினோதம்
ராமாயணமும் மகா பாரதமும் நடக்க வாய்பில்லை என்றால் கண்ணகி மார்பை திருகி மதுரையினை எரித்தது எல்லாம் நடந்திருக்குமா என்றால் பதில் இல்லை
இலக்கியம், பக்தி, உபதேசம், அறிவு நூல், தத்துவ நூல், போர் வியூகம் என அக்காலத்தின் எல்லா விஷயங்களையும் அடக்கியவை இந்நாட்டு இதிகாசமான ராமாயணமும் மகாபாரதமும்
அதனை எல்லாம் சாதாரணம் பொய் என ஒதுக்கிவிட முடியாது, விஷயம் இருக்கின்றது ஆழ படிக்க வேண்டும்
சில ஆண்டுகள் நாத்திகவாதத்திற்காக கண்ணில் பட்டதை எல்லாம் பொய் என கிளம்புவது அரசியலே அன்றி அறிவுடமை ஆகாது
தமிழனுக்கு மதமில்லை என்பதெல்லாம் மகா அயோக்கியதனம். மதமில்லா சமூகம் என அறிவார்ந்த சமூகம் ஒன்று கூட உலகில் இல்லை
ராமர் என்பர் கடவுள் என்பவருக்கு கடவுள் , மற்றவருக்கு ஆழ்ந்த தத்துவ அடையாளம்
மசூதியினை இடித்து கோவில் கட்டுவோம் என்பதை கண்டிக்கலாம் மாறாக ராமர் படத்தை இழிவுபடுத்துவது எல்லாம் மகா வன்மையாக ஒடுக்கபட வேண்டியது.
அவர் படம் மீது செருப்பை வீசுபவன் எல்லாம் காட்டுமிராண்டி பயல் , அயோக்கிய பயல்