பெரியார் பெரியவரா ….

Image may contain: 1 person, text

ஒரு சிலர் கிளம்பிவிட்டான் , அதாவது தமிழிசை பெரியார் பெரியவரா என கேட்டதற்கு உன் சமூகம் மேலாடை அணிய பெரியார்தான் காரணம் என கிளம்பிவிட்டான்

பெரியார் ஜாக்கெட் வியாபாரி எனும் கோணத்தில் பேசினானோ என்னமோ?

மேலாடை சர்ச்சை நடந்தது 18ம் நூற்றாண்டில், அதாவது மாவீரன் நெப்போலியன் காலம், அவன் ஐரோப்பாவில் வெற்றிகொடி நாட்டிய காலத்தில்தான் இங்கு கன்னியாகுமரி பக்கம் அக்கொடுமை நடந்தது.

நாடார்கள் மட்டும் அல்ல, இன்னும் சில தாழ்த்தபட்ட சாதிகளுக்கு மேலாடை அணிய உரிமை இல்லை

வெள்ளையர் தந்திரமாக கிறிஸ்தவர்களாக அவர்களை மாற்ற இக்கொடுமையினை முழுக்க கண்டிக்கவில்லை, இதனால் பலர் கிறிஸ்தவராக மாறி தப்பினர்

இந்த கொடும் பழக்கம் இருந்த காலத்தில்தான் அய்யா வைகுண்டர் அவதரித்தார், அவரின் தீரமிகு போராட்டமே அக்கொடுமையினை நீக்கியது

அதாவது இந்து உயர்சாதி மன்னரால் தொடுக்கபட்ட அக்கொடுமையினை ஒரு இந்து சாமியார்தான் எதிர்த்து போராடி வெற்றிபெற்றார்

இதெல்லாம் நடந்து கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு பின்புதான் பெரியார் பிறந்தார், அடுத்த 40 ஆண்டு கழித்துத்தான் பெரியார் போராளியானார்

ஆக பெரியாருக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே நடந்துவிட்ட போராட்டத்தை பெரியார் நடத்தினார் என்பது பெரும் மோசடி

பின்னாளில் வைக்கம் கோவிலில்தான் அம்மக்களுக்கு ஆதரவாக, அதாவது நடந்துகொண்டிருந்த போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கினார்.

ஆக பெரியார் கோஷ்டிகளின் பொய்களும் எல்லை மீறி சென்றுகொண்டிருக்கின்றன.

பெரியாழ்வார், பெரியாரில் யார் பெரிது என்பது முக்கியமல்ல‌

இந்துக்களின் மேலாடை விவகாரத்தில், சாதி கொடுமையில் ஒரு தாழ்த்தபட்ட‌ இந்து சாமியார்தான் போராடினார் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்