பெரியார் பொதுவாழ்விற்கு வரும் பெண்களை பற்றி….

பெரியார் பொதுவாழ்விற்கு வரும் பெண்களை பற்றி என்ன சொல்லியிருக்கின்றார் என வாசித்தால் இப்படி சொல்லியிருக்கின்றார்

“பெண்களுக்கு மதிப்பற்றுப் போனதற்கும், அவர்கள் வெறும் போகப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் ஆபாசமாய் தங்களை சிங்காரித்துக் கொள்வதேயாகும்.

தங்களது முட்டாள் ஆசையும் மூடபக்தியுமே ஆகும். ஆண்களை விட விலை உயர்ந்த துணி மணிகள் அணிவதுமேயாகும். அலங்கரித்துக் கொள்ளப்பட்ட பெண் தெருவில் நடக்கும் போது, கூட்டத்தில் இருக்கும்போதும் பார்ப்பவர்கள் கண்களுக்கு எப்படித்தெரியும்?

மனதில் என்ன தோன்றும்? என்பதையும் அறிவு உலகத்தில், பொதுத்தொண்டு உலகத்தில் இவர் களுக்கு எவ்வளவு இடமிருக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் அலங்கரித்துக் கொள்ளுவதின் இழிவு புலப்படாமல் போகாது.”

ஆக பெண்கள் அலங்காரம் செய்துகொண்டு வந்து நிற்பது அவர்களுக்கான இழிவு என்பதுபோல் சொல்லியிருக்கின்றார், அப்படி வந்தால் பெண்களுக்கான மரியாதை வராமல் அவர்கள் ஒரு பொருளாக பார்க்கபடுவார்கள் என்பது அவர் சிந்தனை

இந்த பெரியாரின் கொள்கைகளை பேசும் பல பெண்கள் இதனை பின்பற்றுகின்றார்களா என்றால் இல்லை

பெரியார் கொள்கையிலும் எதனை மறைக்கவேண்டுமோ அதனை மறைத்துவிட்டுத்தான் பெரியாரின் பெண்கள் விடுதலை என பேசி கொண்டிருக்கின்றார்கள்.