பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: அருண் ஜேட்லி
இந்தியா எங்கும் நக்சல்கள், தேசவிரோதிகள், குழப்பத்திற்கு வித்திடுவோரை எல்லாம் கைது செய்கின்றார்களாம்
நல்லது
சென்னையில் ஓருவன் அந்நிய நாட்டு தீவிரவாதிபடம் பிடித்து பகிரங்கமாக பவனி வருகின்றான், அவனை ஏன் விட்டு வைத்திருக்கின்றார்கள் என கேட்க கூடாது
இந்திய உளவுதுறை சைமனுக்கு ரகசிய உதவி புரிகின்றது, ஏதோ ஒரு அரசு சக்தி அவனுக்கு உதவுகின்றது என்ற ஐயம் எழும் நேரம் இது
தமிழகம் நாசமாக மைய அரசே உதவ கூடாது, நாடு அமைதியாக வேண்டும் என்ற நோக்கம் உண்மை என்றால் இந்த பிரபாகரனின் தம்பியினை பிடித்து உள்ளே போடட்டும்
அடுத்த ஆண்டு உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: அருண் ஜேட்லி
ஆம், நிச்சயம் எடுக்கும் , காரணம் அடுத்த ஆண்டு இவர்கள் ஆட்சி இருக்காது
தமிழகத்தில் 77 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 நாட்டுக் கோழிகள் வழங்க திட்டம்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
ஏற்கனவே விலை இல்லா ஆடுகள் கொடுத்தார்கள் என்பது நினைவுக்கு வருகின்றது
ஆக “ஆத்தா ஆடு வளர்க்க சொன்னா, கோழி வளர்க்க சொன்னா ஆனா நாய் வளர்க்க சொல்ல்ல, அதுக்கு பதிலா எங்கள இருக்க சொன்னா” என இவர்கள் மேடையில் கண்ணை கசக்கும் காட்சி விரைவில் வரும்