பெரும் அதிரடிகளோடு சீறி பாய்கின்றது சீனா…
“ஒரு அரக்கன் கிழக்கே உறங்குகின்றான், அவன் எழுந்தால் உலகம் தாங்காது, அவன் உறங்கட்டும்” என சீனா பற்றி சொல்லியிருந்தான் நெப்போலியன்.
அது மகா உண்மை, பெரும் அதிரடிகளோடு சீறிபாய்கின்றது சீனா. விண்வெளி, ராணுவம் என அசத்திகொண்டிருக்கும் நாடு புதிய அதிர்ச்சியினை கொடுத்திருக்கின்றது
எலக்ட்ரிக் கார் ஓடும் சாலையினை அமைத்து சோதித்திருக்கின்றது, கார் ஓடும்பொழுதே அதில் சார்ஜ் ஏறிகொள்ளும், பனிகாலத்தில் சாலை தானே சூடாகி அந்த பனியினை விரட்டுமாம்
இதில் சீனா வெற்றிபெற்றது என செய்திகள் வருகின்றன, உண்மை செய்தி என்றால் பெரும் சாதனை
இதனை விட மிகபெரும் அதிர்ச்சி சொந்தமாக பயணிகள் விமானத்தை கட்டியிருக்கின்றது சீனா
இந்த உலகில் எல்லா நாடுகளும் விமான போக்குவரத்து நடத்துகின்றன, கத்தார் சவுதி போன்றவை சந்தையில் கத்தரிக்காய் பொறுக்குவது போல் விமானங்களை வாங்குவார்கள்
ஆனால் விமானம் செய்வது யாரென்றால் அமெரிக்க மற்றும் பிரான்ஸ் கம்பெனிகள். உலக விமான தயாரிப்பு இவர்களிடம்தான் இருக்கின்றது
மற்ற நாடுகள் போர்விமானம் தயாரிக்குமே அன்றி, பயணிகள் விமானம் பக்கம் வராது, அவ்வளவு சிக்கலான பணி அது
அதில் சீனா அசத்தி, ஆசியாவில் முதல் சொந்தவிமானம் கட்டிய நாடு என பெருமைபெற்றாயிற்று, இதனை வர்த்தகமாக்கினால் பணத்தை அள்ளிவிடுவார்கள்
60 ஆண்டுகளுக்கு முன்பு ஏழையாக பின் தங்கிய நாடாக இருந்த சீனா இன்று மிகபெரும் சக்தியாயிற்று
காரணம் அங்கு நிலையான ஆட்சி, சிக்கல் இல்லா ஆனால் உறுதியான நிர்வாகம், மாவோ, சூ என் லாய், டெங் ஜியோ பிங், ஜின் பெங் என மிக உறுதியான ஆளுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன
இன்னொன்று ஒழுங்காக மக்களை உழைக்க வைக்கும் நாடு அது, மக்களை அதிகம் பேசவிடாதே, பேசிகொண்டே இருப்பார்களே தவிர உழைக்கமாட்டார்கள் என்பது சீன அரசு தத்துவம்
இந்தியாவில் இதுதான் சிக்கல், ஆளாளுக்கு பேசிகொண்டே இருப்பார்களே தவிர ஒரு விஷயமும் உருப்படியாக நடக்காது
பின் என்னாகும்?
சீனா விமானம் எல்லாம் கட்டும்பொழுது, இந்தியா ஆதார் அட்டைக்கு அதுவும் வெற்று அட்டைக்கு விவகாரம் செய்துகொண்டே இருக்கின்றது,
500 ரூபாய்க்கு ஆதார் விஷயம் கசிகின்றது என்பதெல்லாம் அதுவும் சர்வதேச உளவாளியான ஸ்டோலன் கருத்து சொல்லும்வரை சென்றிருக்கின்றது என்றால் நிலமை மகா சிக்கல் என்றே பொருள்.
லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் எதிராக பெரும் நடவடிக்கை எடுக்காமல் இத்தேசம் முன்னேற வாய்ப்பே இல்லை
இத்தேசமும் மாறவேண்டும், வேகமாக முன்னேற வேண்டும். இல்லையேல் சீனாவுடனான சம பலத்தை இழந்து விட்டால் ஏராளமான சிக்கலை இத்தேசம் சந்திக்க வேண்டிவரும்