பெரும் வறட்சியில் தமிழகம் …..
பெரும் வறட்சியில் தமிழகம் சிக்கியிருக்கின்றது, அரிசி விளைச்சலின்றி ரேஷனில் கூட இலவச அரிசி கொடுக்கமுடியா நிலை ஏற்பட்டிருக்கின்றது
1965களில் இம்மாதிரியான சிக்கலில்தான் தமிழகம் சிக்கி இருந்தது, அரிசி கட்டுப்பாடு, தட்டுப்பாடு எல்லாம் இருந்தது
அதனை அரசியலாக்கித்தான் திமுக பெரும் ஆட்டம் ஆடியது, காமராஜரும், பக்தவச்சலமும் கொடுங்கோலர்கள் எனும் அளவிற்கு அதன் வீரிய தாக்கம் இருந்தது
இன்றும் அதே சிக்கல் வந்தாகிவிட்டது, ஆனால் ஆட்சி யாருடையது?
மத்தியில் பாஜக, இங்கு அதிமுக
ஏதாவது ஒரு சத்தம் எங்கிருந்தாவது வரும் என நினைக்கின்றீர்கள்? திமுகவின் கலைஞரும் ஓய்ந்துவிட்டார், அவர் வாய்திறந்தாலும் உங்கள் ஆட்சியில் முப்போகம் விளைந்ததா? என கேட்டால் பதிலிருக்காது
காமராஜரும், பக்தவச்சலமும் செய்தால் அது தவறு, கொடுங்கோல் ஆட்சி, தமிழர் விரோதம்
ஆனால் மோடியும், பழனிச்சாமியும் செய்தால் அது நல்லாட்சி, தமிழர் நலன்காக்கும் ஆட்சி, அதனை பற்றியெல்லாம் யாரும் பேசமாட்டார்கள்
தமிழக விவசாயம் எவ்வளவு சீரழிந்துவிட்டது, எனும் அபாயம் தெரிகின்றது, நிலமை இன்னும் மகா சிக்கல் ஆகலாம்..
உண்மை வெளிவரும் முன் பொய் ஊரை சுற்றிவிடும் என்பார்கள், அப்படி ஊரை சுற்றிய பொய் இன்று அரிசி பஞ்சத்தோடு பல்லிளித்து அமர்ந்துவிட்டது
உண்மை வெளிவந்துகொண்டு இருக்கின்றது..
ஜெயலலிதா இருக்கும்போது பேசியிருக்கலாமே? கமல்ஹாசனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
ஜெயா இருக்கும்பொழுது இவரே பேசவில்லை, அட அமர்ந்தாவது இருந்தாரா என்றால் குப்புற ஜெயா காலில் விழுந்துகிடந்தார்
இதில் கமலஹாசன் பேசவில்லை என கேள்வி வேறு
முதலில் இவர் பேசினாரா?..
ஒருவேளை நான்தான் பேசமுடியாமல் இருந்தேன், நீராவது பேசியிருக்கலாம் இல்லையா? என கவலைபடுகின்றாரோ?
நாளை தமிழக பட்ஜெட்
கடந்த பட்ஜெட்டில் கனிம மணல் வியாபாரத்தை அரசே ஏற்றுநடத்தும் என ஜெயா சொல்லியிருந்தார்
ஜெயா பல கனவுகளை கண்டிருந்தார், அவரின் அந்த கனிம மண் கனவில் மட்டும் மண் அள்ளிபோட்டுவிட்டு, மற்ற கனவினை நனவாக்க இந்த அரசு உழைக்கும் என நம்புவோம்