பேய் என பெய்யட்டும் மழை
கமலஹாசன் தேவர் மகன் என்றாலோ, சண்டியர் என படம் எடுத்தால் குதிக்கும் கிருஷ்ணசாமியினை தேவர் ஜெயந்தி அல்ட்ராசிட்டிகளில் காணவே முடியாது
மிஸ்டர் கி.சாமி? தமிழகத்தில் இருக்கின்றீரா இல்லையா?
ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வர உள்ளது, திமுக ஒரு ஊழல் கட்சி : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
இன்னும் வராத தீர்ப்பை விடுங்கள், வந்த தீர்ப்பு உங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா குற்றவாளி என்றும், நீங்கள் கும்பிட்ட சசிகலா அடுத்த குற்றவாளி என்றும் சொல்லிவிட்டதே அய்யா..
தீர்பளிக்கபட்ட அதிமுக ஊழக் கட்சியா, தீர்ப்பே வராத திமுகவா?
இவ்வளவு அறிவோடு இருக்கும் நீங்கள் தயவு செய்து இந்த பாழ்பட்ட தமிழகத்தில் இருக்காதீர்கள், உங்கள் அறிவுக்கு டிம்பிடம் அல்லது புட்டினீடம்தான் நீங்கள் இருந்தாக வேண்டும்
தமிழனுக்கு மதமில்லை என சொன்னவனில் பாதிபேர் முருக பக்தரான பசும்பொன் தேவருக்கு ஜே என சொல்லிகொண்டிருக்கின்றான்
மீதிபேர் மிக சிறந்த சிவபக்தனும், சிவனுக்கு பேராலயம் எழுப்பியவருமான ராஜராஜசோழனின் சதயவிழாவினை கொண்டாடிகொண்டிருக்கின்றான்.
இவை இன்றைய காட்சிகள்
நாளையே தமிழனுக்கு மதமில்லை, அது ஆரிய புரட்டு என கிளம்பியும் விடுவான் என்பது வேறுவிஷயம்.
ஊரில் இருந்து வரும் செய்திகளில் மழை பொழிகின்றது எனும் செய்தி கொடுக்கும் மகிழ்ச்சியினை எந்த செய்தியாலும் கொடுக்க முடியாது.
மழை அவ்வளவு மகிழ்ச்சியானது,
ஒரு துளி நீருக்கு வானத்தை பார்த்து நின்றோ அல்லது 800 அடி தோண்டி நின்றால் தவிர அந்த துயரத்தை உணரமுடியாது.
அங்கே மழையின்றி தவிக்கையில், மலேஷிய மழையினை ரசிக்க மனம் வரவில்லை.
இனி உற்சாகமாக ரசிக்கலாம்.
பேய் என பெய்யட்டும் மழை.