பேரரிஞர் அண்ணா பல்கலைகழகம்
1978ற்கு முன்பு வரை சென்னையின் தொழில்நுட்ப கல்லூரியாக இருந்தவை 3, முதலாவது கிண்டி பொறியியல் கல்லூரி எனும் பழம்பெருமை வாய்ந்த பொறியில கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்ப கழகம், மெட்ராஸ் தொழில்நுட்ப கழகம்
இவைதான் பொறியியலுக்கு மிக பெரும் கல்வி கேந்திரமாக இருந்தது, பெரும் பொறியாளர்களை உருவாக்கியது
1978ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ராமசந்திரனுக்கு அண்ணா பெயரில் ஏதும் செய்ய ஆசை வந்தது
ஏற்கனவே மவுண்ட் ரோட்டை கலைஞர் அண்ணா சாலை ஆக்கி இருந்ததால், அப்படியே பழைய கல்லூரிகளை ஒன்றிணைத்து “பேரரிஞர் அண்ணா பல்கலைகழகம்” என மாற்றிவிட்டார்
அது இதே செப்டம்பர் 4.
உண்மையில் அண்ணா என்பவரின் பெயர் விஞ்ஞான கூடத்திற்கு வருவது சரியல்ல, சீனிவாச ராமானுஜமோ இல்லை சர்சிவி ராமன் பெயரோ அதற்கு வைக்கபட்டிருக்க வேண்டும்
ஆனால் அவர்களா ராமசந்திரனை அரசியல்வாதி ஆக்கினார்கள்? அண்ணாதான் ஆக்கினார்
இதனால் புகழ்பெற்ற அந்த மூன்று கல்வி நிலையங்களின் இணைப்பு அண்ணா பெயராயிற்று
1982ல் ராமசந்திரனுக்கு பெரும் சந்தேகம் உண்டாயிற்று, அறிஞர் பேரரிஞகராக இருக்கமுடியாதோ என சந்தேகபட்டாரோ என்னமோ அது அண்ணா பல்கலைகழகம் ஆயிற்று
முன்பு இந்தியாவின் சிறந்த பல்கலைகழகமாக இருந்தது, இப்பொழுது பேராசிரியர் பணி நியமணம் முதல் பலவற்றில் பெரும் சர்ச்சை வெடிக்கின்றது
இப்பொழுது கல்வி தரம் எப்படி என்றால் மதிப்பெண்கள் கூடுதலாக பெற கடந்த ஆண்டு மட்டும் மாணவர்கள் 400 கோடி செலவழித்திருக்கின்றார்களாம்
தமிழக கல்வி வளர்ச்சி இப்படி இருக்கின்றது