பேராசிரியர் க. அன்பழகன் 96வது பிறந்த நாள்

Image may contain: 2 people, people smiling, sunglasses and close-up

திமுக மூத்த உறுப்பினரான க.அன்பழகனுக்கு இன்று பிறந்தநாளாம், 96ம் பிறந்தநாளாம்

கலைஞரை விட மூத்தவர் அவர். இன்றைய தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதி அவர்தான். கல்லூரி பேராசிரியராக இருந்தவர். சமஸ்கிருதமில்லா தமிழை கொடுக்கின்றோம் என அண்ணா தலமையில் நடந்த தமிழ் சீர்திருத்தங்கள் எல்லாவற்றிலும் அருகிருந்தவன் அன்பழகன்

அவர் பெயர் ராமையா, சுயமரியாதை மிக்க திராவிட உறுப்பினர் ராமன் எனும் பெயரோடு அலைவதா? என அதனை மாற்றி அன்பழகன் எனும் அழகான தமிழ்பெயராக்கினார்

(ஆனால் பெரியார் ராமசாமி எனும் பெயரோடுதான் சாகும் வரை இருந்தார்)

ஆச்சரியமான விஷயம் அல்லது இன்னொரு வகையில் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால் கலைஞருக்கு வெகு சீனியர் அன்பழகன், பேராசிரியரும் கூட‌

கலைஞர் 7ம் வகுப்பு தாண்டவில்லை

சுருக்கமாக சொன்னால் அன்பழகன் பேசிய கூட்டங்களுக்கு போஸ்டர் ஒட்டிய வேலையினை செய்தவர் கலைஞர் கருணாநிதி

ஆனால் காலவோட்டத்தில் கலைஞருக்கு கீழ் அமர்ந்துவிட்டார் அன்பழகன், இன்றுவரை அப்படியே இருந்துவிட்டார்

உறுதியாக சொல்லலாம் திமுகவிற்கு பெரும் உழைப்பினை கொடுத்தவர் அன்பழகன், அது அண்ணா , கலைஞரின் உழைப்பிற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல‌

அண்ணா, நெடுஞ்செழியன் , அன்பழகன், மதியழகன் என்றுதான் முதல் வரிசை இருந்தது. ஆனால் அண்ணாவிற்கு பின் கலைஞர் ஆடிய சித்துவிளையாட்டில் நெடுஞ்செழியன் தலை தெரிக்க ஓடினார், மதியழகனை காணவில்லை, இந்த களபேரங்களை கண்ட அன்பழகன் அப்படியே திமுகவில் அமர்ந்துகொண்டார்

ஒரு திமுக உறுப்பினராக இருந்தாரே அன்றி, பெரும் உயரங்களை எல்லாம் அவர் எட்ட ஆசைபடவில்லை. நினைத்திருந்தால் டெல்லி எம்பி ஆகியிருக்கலாம், மத்திய அமைச்சர் ஆகியிருக்கலாம்

ஒருவேளை ஆசைபட்டாலும் நடக்காது என நினைத்துவிட்டாரோ என்னமோ

மனிதர் ஏன் இப்படி இருந்தார், அதுவும் எத்தனையோ குழப்பங்கள் வந்தபொழுதெல்லாம் தன் சொத்துபத்திரம் கலைஞரிடம் இருந்தது போல அமைதியாக இருந்தார் என்பதெல்லாம் அன்பழகன் சொல்லவேண்டிய பதில்கள்

ஆனால் கலைஞரும் அவரை மரியாதையாக நடத்தினார், முக்கிய ஆலோசனைகளில் அவர் உடன் இருக்குமாறு பார்த்துகொண்டார். அது கலைஞர் நலமாக இருக்கும் வரை தொடர்ந்தது

கலைஞருக்கு பின் அன்பழகனே செயல்தலைவர் ஆகியிருக்க வேண்டும் , ஆனால் அண்ணாவிற்கு பின் அமைதி அரசியல் செய்த அன்பழகன் அமைதியாகவே தொடர்கின்றார்.

கொள்கை யாருக்கும் இருக்கலாம், ஆனால் அரசியல் செய்ய தனி ஆற்றல் வேண்டும் அது கலைஞருக்கு இருக்கின்றது என சொல்லி ஏற்றுகொண்டவர் அன்பழகன். அந்த பெருந்தன்மை பாராட்டுகுரியது.

இன்று அவர் பிறந்தநாளில் எல்லோரும் வாழ்த்துகின்றார்கள், திமுகவில் புதிதாக அறிவிப்பில்லாமல் இணைந்திருக்கும் வைகோவும் வாழ்த்துகின்றார்

நாங்கள் இருக்கும்வரை தமிழகத்தில் “பாஜக எனும் மதவாத சக்தி வளராது..” என உறுமிகொண்டே அன்பழகனுக்கு சால்வை அணிவிக்கின்றார் வைகோ

ஆம் மோடிக்கு முன்பு பாரளுமன்ற தேர்தலில் வைகோ கூட்டணி தலைவராக சால்வை போர்த்தினார் அல்லவா, அதே சால்வை

அதாவது மோடியினை தமிழகத்தில் அறிமுகபடுத்தி பேசியவர்தான் வைகோ, அன்று மதவாதமாக தெரியவில்லையாம், இன்று தெரிகின்றதாம் அக்கட்சி வளர இவர் விடமாட்டாராம்

அக்கட்சி தமிழகத்தில் வளர்ந்திருந்தால் வைகோ திமுக பக்கம் போயிருப்பாரா? நிச்சயம் இல்லை. வளராத வருத்தத்தில் சென்று விட்டார்

அது போகட்டும்

மிகபெரும் பேராசிரியராய், நல்ல பேச்சாளராய் அண்ணாவின் அடுத்த தலைவராய் விளங்கிய அன்பழகனை தனக்கு அடுத்து அமர்த்தி கிட்டதட்ட 50 ஆண்டுகாலம் அவரை பகைக்காமலும் அதே நேரம் வளரவும் விடாமலும் அரசியல் செய்துவிட்டார் அல்லவா?

இதுதான் கலைஞரின் சாமர்த்தியம்

அண்ணாவினை கலைஞர் முதலில் கண்ட காட்சி வரலாற்றில் இருக்கின்றது, ஆனால் அன்பழகனை எங்கு முதலில் கண்டார் எனபது பற்றி தகவல் இல்லை

ஆனால் முதல் சந்திப்பில் இந்த கருணாநிதி ஒருநாள் தனக்கு தலைவராக வருவான் என அன்பழகன் கொஞ்சமும் நினைத்துபார்த்திருக்க முடியாது,

காலம் எப்படியெல்லாமோ யாரை வைத்தெல்லாமோ விளையாடும், அது அன்பழகன் வாழ்விலும் நடந்திருக்கின்றது.