பைபிள் காட்டிய உணவுமுறை

இந்த பைபிளை யாரும் எப்படியும் ஆராய்ச்சி செய்யட்டும், சங்கம் ஆய்வு செய்தது பைபிள் காட்டிய உணவுமுறை

ஆம் பைபிளில் ஆச்சரியமான உணவுகள் எல்லாம் வரும், ஏதோ சுவையான மன்னா எல்லாம் வானத்தில் இருந்து விழுந்த காட்சி எல்லாம் அதில் உண்டு

அது மானிடருக்கு கிடைக்கா தெய்வீக உணவாம், இருக்கட்டும் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

இந்த பழைய ஏற்பாட்டில் ஒரு அதிசய உணவுபிரியன் இருந்திருக்கின்றான், அவன் பெயர் மாமன்னன் சாலமோன்

அவன் ஞானிகளுக்கெல்லாம் ஞானி என்பதால் தன் ஞானத்தில் சமையலுக்கும் ஒருபங்கு கொடுத்திருக்கின்றான்

பொதுவாக கோதுமை உணவு நிரம்பிய அந்த மேற்காசியாவில் அவனுக்கு அரிசி உணவுமேல் ஆசை இருந்திருக்கின்றது

இந்தியாவில் இருந்து அரிசியும், வாசனை பொருட்களையும் வாங்கி குவித்திருக்கின்றான்

ஆம் பிரியாணியினை அவனே முதலில் சமைத்தான் என்கின்றது வரலாறு

அவன் அரண்மனையின் புகழ்பெற்ற உணவாக அது இருந்திருக்கின்றது, இது இஸ்லாமியரின் புத்தகங்களிலும் சுலைமான் பெருமை என வருகின்றது

ஆம் அவன் சமைத்த பிரியாணியே அரேபியாவில் பரவி அதன் பின் இந்தியாவிலும் ராஜ குடும்பத்து உணவாக இங்கு வந்திருக்கின்றது

நல்ல கிறிஸ்தவன் நிச்சயம் பழைய ஏற்பாட்டை பின்பற்ற வேண்டும் என்கின்றார்கள்,பைபிளில் ஏதாவது ஒன்றை பின்பற்ற வேண்டும்

அதனால் சாலமோனின் சமையலையும் அவன் தயாரித்த பிரியாணியினையாவது பின்பற்றி தீரவேண்டும்

கிறிஸ்துவத்தில் ஒரு சோகம் நிகழ்ந்திருக்கின்றது

ஆம் பத்துகட்டளை கொடுக்கபடும் பொழுது அக்காலத்தில் சாலமோன் இல்லை

இருந்திருந்தால் “பிரியாணி சாப்பிடாதவன் கடவுளின் அருளை பெறாத பாவி” என்றும், “பிரியாணி சுவையில் கடவுளை போற்றுவாயாக” என்றும் 11ம் கட்டளை ஒன்று நிச்சயம் வந்திருக்கும்

சாலமோனுக்கு பின் கிருஷ்ணர் அவதரித்தால் என்ன சொல்லியிருப்பார்?

பகவான் கண்ணன் மட்டும் என்ன சொல்லியிருப்பார் “அர்ஜூனா உணவுகளில் நான் பிரியாணி”