பொது சேவை ஊழியர் எப்படி இருக்கவேண்டும்?

ஒரு ஊதிய உயர்வு அறிவிக்கபடும்பொழுது சேவை பணியில் இருப்போர் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு கனடா மருத்துவர்களே சாட்சி

அதாகபட்டது கனடா அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வினை அறிவித்துள்ளது, ஆனால் ஆச்சரியமாக அதனை மறுத்த மருத்துவர்கள் எப்படி கோரிக்கை வைத்துள்ளனர் தெரியுமா?

“நாங்கள் நல்ல சம்பளம் வாங்குகின்றோம் போதும், இதற்கு மேல் செலவழிப்பதாக இருந்தால் நர்ஸ்கள், கடை நிலை ஊழியர்கள் சம்பளத்தை கூட்டுங்கள். மருத்துவமனை நோயாளிகளுக்கு வசதிகளை கொடுங்கள்

அப்படி செய்தால் எல்லோரும் மகிழ்ந்து பணி செய்வோம், அதை விடுத்து எங்களுக்கு மட்டும் கூட்டுவது மருத்துமனையில் பிளவை ஏற்படுத்தும் , நோயாளிகளின் கிசிச்சையும் தரமும் எங்கள் சம்பளத்தை விட முக்கியம்”

எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா? இப்படி ஒரு செய்தியினை தலைகீழாக நின்றாலும், இந்தியா முழுக்க பாலும் தேனும் ஏன் உருக்கிவிட்ட தங்கமே ஓடினாலும் இந்தியாவில் கேட்க முடியுமா?

முடியாது

பொது சேவை ஊழியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு கனடா மருத்துவர்கள் உலகிற்கே வழிகாட்டுகின்றனர்

சும்மாவே தும்பிகள் அலறும், இனி என்ன சொல்வார்கள்? தங்க தமிழன் ஜஸ்டின் ஆட்சியில் கனடா சாதனை படைத்து வழிகாட்டுகின்றது, தமிழண்டா என கிளம்புவார்கள்

அதனை எல்லாம் கருமம்டா என பார்த்து நாமும் தொலைக்க வேண்டும்

எனினும் கனடா மருத்துவர்களின் உயர்ந்த குணம் வாழ்த்துகுரியது, பின்னர் ஏன் கனடா உலகில் உயராது?