பொன்மாணிக்கவேல் மாற்றபட்டதில் அரசியல் இல்லை : அமைச்சர்
சிலைகடத்தல் பிரிவில் இருந்து ஐ.ஜி பொன்மாணிக்கவேல் மாற்றபட்டிருக்கின்றார் என்பது அதிகாரபூர்வமான செய்தி ஆனால் மகா அதிர்ச்சியான செய்தி
தமிழகத்து ஆலயங்களில் காணாமல் போன சிலைகளை அவர் மீட்டெடுத்த விதமும், செய்த நடவடிக்கைகளும் மிக அதிரடியானவை, முடியவே முடியாது என இருந்த விஷயங்களை சாதித்து சிலைகளை மீட்டு கொண்டுவந்தார். வரலாற்று சாதனை அவை
அவரை ஏன் மாற்ற வேண்டும் என்றால் அதிகார பூர்வற்ற செய்தி இப்படி சுற்றுகின்றது
சிலைகடத்தலின் வேரினை அவர் தேடிசென்றபொழுது பிரபல கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் கும்பல் தலைவனாக இருப்பதாகவும் அவரை பொன்மாணிக்க வேல் குறிவைத்ததாகவும் செய்திகள் வருகின்றன
அந்த தலைவர் பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இந்த மாபெரும் அநியாயம் நடந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன
அந்த முக்கிய தலைவர் திமுகவின் பெரிய கருப்பன் என்றும், பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தது ஸ்டாலின் என்றும் சில விஷயங்கள் பரவினாலும் அவற்றிற்கு ஆதாரமில்லை
ஆனால் பழனிச்சாமி அரசு எப்படி நிலைத்திருகின்றது என்றால் இப்படித்தான், யார் தனக்கு சவால் கொடுப்பவர்கள் என்றாலும் “இது உங்கள் ஆட்சி, உங்களுக்கு தேவையானதை செய்யவே யாம் இருக்கின்றோம்” என்ற தந்திரத்தில் தப்பி வருகின்றார்கள்
பொன்மாணிக்கவேல் மாற்றபட்டதில் அரசியல் இல்லை என அமைச்சர் ஒருவர் உளறும்பொழுதே பொறி தட்டுகின்றது
ஆலய சிலைகளை மீட்கும் மிக புனிதமான பணியினை மிக தைரியமாக செய்த பொன்மாணிக்கவேல் அவர்களை மாற்றிவிட்ட இந்த அரசு நிச்சயம் நெடுநாள் நீடிக்காது
பழனிச்சாமி அரசு செய்த கொடுமைகளில் தமிழகத்திற்கு மாபெரும் கொடுமையான விஷயம் இது..
சோமநாதபுர ஆலயத்தினை இடித்த கஜினியினை விட, தென்னக ஆலயங்களை சூறையாடிய மாலிக்காபூரை விட மோசமான காரியத்தை செய்திருக்கின்றது பழனிசாமி அரசு